‘‘தொழுது விழாக்குறைக்குத் தொல்கடவுட் பேணி யழுதுவிழாக்கொள்வ ரன்னோ - முழுதளிப்போன் வாணாட்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்நர் நீணாட்கோ ளென்று நினைந்து’’
(பெரும்பொருள் விளக்கம்.புறத்திரட்டு 1326.
எயில்கோடல் 5)
இது புறத்தோன் வாணாட்கோள்.
‘‘முற்றரண மென்னு முகிலுருமுப் போற்றோன்றக் கொற்றவன் கொற்றவா ணாட்கொண்டான் - புற்றிழிந்த நாகக் குழாம்போ னடுங்கின வென்னாங்கொல் வேகக் குழாக்களிற்று வேந்து’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1338.
எயில்காத்தல் 4)
இஃது அகத்தோள் வாணாட்கோள்.
மடையமை ஏணிமிசை மயக்கம் - மீதிடு பலகையோடும் மடுத்துச் செய்யப்பட்ட
ஏணிமிசைநின்று புறத்தோரும் அகத்தோரும் போர் செய்தலும்;
உ-ம்:
‘‘சேணுயர் ஞாயிற் றிணிதோளா னேற்றவு மேணி தவிரப்பாய்ந் தேறவும் - பாணியாப் புள்ளிற் பரந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர் கொள்ளற் கரிய குறும்பு’’
இது புறத்தோர் ஏணிமயக்கம்.
‘‘இடையெழுவிற் போர்விலங்கும் யானையோர் போலு மடையமை யேணி மயக்கிற் - படையமைந்த ஞாயில் பிணம்பிறக்கித் தூர்த்தார் நகரோர்க்கு வாயி லெவனாங்கொல் மற்று’’
இஃது அகத்தோர் ஏணிமயக்கம்.
இனி இரண்டும் ஒருங்கு வருதலுங் கொள்க.
உ-ம்:
‘‘பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொருவ ருடன்றெழுந்த காலை - யிருவரும் மண்ணோடு சார்த்தி மதில்சார்த் தியவேணி விண்ணொடு சார்த்தி விடும்’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு 1330.
எயில்கோடல் 9)
என வரும்.
கடைஇச் சுற்று
அமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய
முதிர்வும் - புறத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலிற் செய்யும் போரின்றாக,
|