நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5034
Zoom In NormalZoom Out


அகத்தோன்     படையை வென்று அப் புறமதிலைக் கைக்கொண்டு,
உள்மதிலை   வளைத்த   வினை  முதிர்ச்சியும்;  அகத்தோன்  தன்
படையைச்  செலுத்திப் புறமதிலிற்செய்யும் போரின்றாகப், புறத்தோன்
படையைத்  தள்ளி வென்று அப்புறமதிலைக் கைக்கொண்டு வளைத்த
வினை முதிர்ச்சியும்;

உ-ம்:

‘‘கடல்பரந்து மேருச்சூழ் காலம்போற் சென்றோர்
கொடிமதில் காத்தோரைக் கொல்லக் - கடலெதிர்
தோன்றாப் புலிபோ லரண்மறவர் தொக்கடைந்தார்
மான்றேரான் மூதூர் வரைப்பு’’

இது புறத்தோன் முற்றிய முதிர்வு.

‘‘ஊர்சூழ் புரிசையுடன்சூழ் படைமாயக்
கார்சூழ்குன் றன்ன கடைகடந்து - போர்மறவர்
மேகமே போலெயில் சூழ்ந்தார் விலங்கல்போன்
றாகஞ்சேர் தோள்கொட்டி யார்த்து’’

இஃது அகத்தோன் முற்றிய முதிர்வு.

அன்றி  முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும். புற மதிலிலன்றி
உள்மதிற்கட்  புறத்தோனான்  முற்றப்பட்ட  அகத்தோன்  விரும்பின
மதில்காவலும்;  அவன்  காத்தலின்றித் தான் சூழப்பட்ட இடத்திருந்த
புறத்தோன் போர்செய்தலை விரும்பிய உள்ளத்தைக் காத்தலும்;

நொச்சியாவது காவல். இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங் கொள்க;
அது    மதிலைக்காத்தலும்  உள்ளத்தைக்  காத்தலுமென  இருவர்க்கு
மாயிற்று. இக்கருத்தானே