துங்காதார் யார்யாவர் - மஞ்சுசூழ் வான்றோய் புரிசை பொறியு மடங்கின வான்றோ ரடக்கம்போ லாங்கு’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1329.
எயில்கோடல்8)
இது புறத்தோன் வீழ்ந்த புதுமை.
‘‘தாக்கற்குப் பேருந் தகர்போன் மதிலகத் தூக்க முடையோ ரொதுங்கியுங் - கார்க்க ணிடி புறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றா ரடிபிறக் கீடு மரிது’’
(தகடூர்யாத்திரை.புறத்திரட்டு.1341.எயில்காத்தல் 7)
இஃது அகத்தோன் வீழ்ந்த புதுமை.
நீர்ச்
செரு வீழ்ந்த பாசியும் - கொண்ட மதிலகத்தை விட்டப் போகாத புறத்தோரும் அவரைக்
கழியத் தாக்கல் ஆற்றாத அகத் தோரும் எயிற்புறத்து அகழின்
இருகரையும் பற்றி நீரிடைப் படர்ந்த நீர்ப்பாசி போன்று அக்கிடங்கின்கட்போரை விரும்பின பாசியும்;
‘பாசிபோல் நீங்காமல் நிற்றலிற் ‘பாசி’ யென்றார்.
உ-ம்:
‘‘பொலங்செய் கருவிப் பொறையுமிப் பண்ணாய் நிலந்திடர் பட்டதின் றாயிற் - கலங்கமர்மேல் வேத்தமர் செய்யும் விரகென்னாம் வேன்மறவர் நீத்துநீர்ப் பாய்புலிபோ னின்று’’
இஃது இருவருக்கும் ஒக்கும்.
வேறு வேறு
வருமெனினுங் காண்க.
அதா அன்று
ஊர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனும் - அம் மதிற் புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய
அப்பாசி மறனும்;
பாசியென்றார்,
நீரிற் பாசிபோல இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும் பொருதலின்.
உ-ம்:
‘‘மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர் பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தா - ரெறிதொறும்போய் நீர்ச்செறி பாசிபோ னீங்காது தங்கோமா னூர்ச்செரு வுற்றாரைக் கண்டு’’
இது புறத்தோன் பாசிமறம்.
‘‘தாந்தங் கடைதொறுஞ் சாய்ப்
|