நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5037
Zoom In NormalZoom Out


பவு மேல்விழுந்த
வேந்தன் படைப்பிணத்து வீழ்தலா - னாங்கு
மதுக்கமழுந் தார்மன்னர்க் குள்ளூர் மறுகிற்
பதுக்கையும் வேண்டாதாம் பற்று’’

இஃது அகத்தோன் பாசிமறம்.

அகமிசைக்கு   இவர்ந்தோன்    பக்கமும்   -  புறஞ்சேரிமதிலும்
ஊரமர்மதிலும்  அல்லாத  கோயிற்  புரிசைகளின்  மேலும் ஏறிநின்று
போர்செய்தற்குப் பரந்துசென்றோன் கூறுபாடும்;

உ-ம்:

‘‘வாயிற் கிடங்கொடுக்கி மாற்றினார் தம்பிணத்தாற்
கோயிற் கிடங்கொடுக்கிக் கோண்மறவர் - ஞாயிற்
கொடுமுடிமேற் குப்புற்றார் கோவேந்தர்க் காக
நெடுமுடிதாங் கோட னினைந்து’’

இது புறத்தோன் அகமிசைக்கிவர்தல்.

‘‘புற்றுறை பாம்பின் விடநோக்கம் போனோக்கிக்
கொற்றுறை வாய்த்த கொலைவேலோர் - கொற்றவ
னாரெயின்மேற் றோன்றினா ரந்தரத்துக் கூடாத
போரெயின்மேல் வாழவுணர் போன்று’’

இஃது அகத்தோன் அகமிசைக்கிவர்தல்.

இகன்மதிற்   குடுமி  கொண்ட  மண்ணு  மங்கலமும் - அங்ஙனம்
இகல்செய்த   மதிற்கண்   ஒருவன்    ஒருவனைக்  கொன்று  அவன்
முடிக்கலம்   முதலியன   கொண்டு,   பட்ட   வேந்தன்  பெயரானே
முடியுனைந்து நீராடும் மங்கலமும்;

உ-ம்:

‘‘மழுவாளான் மன்னர் மருங்கறுத்த மால்போற்
பொழிலேழுங் கைக்கொண்ட போழ்தி - னெழின்முடி
சூடாச்சீர்க் கொற்றவனுஞ் சூடினான் கோடியர்க்கே
கூடார்நா டெல்லாங் கொடுத்து’’

இது புறத்தோன் மண்ணு மங்கலம்.

‘‘வென்றி பெறவந்த வேந்தை யிகன்மதில்வாய்க்
கொன்று குடுமி கொளக்