ந்தானென் னேறு’’
(புறப். பொருள். 176)
என வருவன கணையும் வேலும் மொய்த்து
நின்றன.
கிடந்தானென்புழி
நிலந்தீண்டாவகையின் நின்ற யாக்கையாயிற்று.
‘‘வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற்குச் சான்றுரைப்ப போன்றன தங்குறை - மான்றேர்மேல் வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர்விடாப் பாய்ந்தன மேன்மேற் பல.’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1350.அமர் 6)
இது வஞ்சிப்புறத்துத் தும்பையாய் இருநிலந்
தீண்டாவகை.
‘‘பருதிவேன் மன்னர் பலர்காணப் பற்றார் குருதிவாள் கூறிரண்டு செய்ய - வொருதுணி கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே மண்ணெமதே மண்ணெமதே வென்று.’’
இஃது உழிஞைப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டா வகை.
இது திணைக்கெல்லாம் பொது அன்மையிற் றிணையெனவும் படாது; திணைக்கே சிறப்பிலக்கணமாதலிற் றுறையெனவும்
படாது; ஆயினுந் துறைப்பொருள் நிகழ்ந்து கழிந்தபிற் கூறியதாமென் றுணர்க.
(16)
தும்பை பன்னிரு துறைத்து
ஆதல்
|