இஃது அவ் வாகைத்திணைக்குப்
பொதுவிலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.) தாவில்
கொள்கைத் தத்தங் கூற்றை - வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே
நான்கு, வருணத் தோரும் அறிவருந்தாபதர் முதலியோருந் தம்முடைய
கூறுபாடுகளை; பாகுபட மிகுதிப்படுத்தல்
என்ப - இருவகைப்பட மிகுதிப்படுத்தலென்று கூறுவர் ஆசிரியர்
எ-று.
இருவகையாவன,
தன்னைத் தானே மிகுதிப்படுத்தலும்
பிறர் மீக்கூறுபடுத்தலுமாம். இனி இருவகைக்குள் உறழ்ச்சியாற்
பெற்ற வென்றியை வாகையெனவும் இயல்பாகப் பெற்ற
வென்றியை முல்லையெனவுங் கூறுவர். படுதலென்னாது படுத்த
லெனப் பிறவினையாற் கூறினார். அவர் தம்மினுறழாதவழியும்
ஒருவன் அவரை உறழ்ந்து உயர்ந்தோர் இவரென் றுரைத்தலும்
வாகை யென்றற்கு. ஒன்றனோடு ஒப்பு ஒரீஇக்
காணாது மாணிக்கத்தினை நன்றென்றாற்போல உலகமுழுதும்
அறியும் உயர்ச்சியுடைமையும் அது. ‘தாவில் கொள்கை’ யெனவே இரணியனைப்போல வலியானும் வருத்தத்தானுங் கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று.
(19)
|