நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5388
Zoom In NormalZoom Out


 

றித் தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய் பிழைத்தேன் அருளினி.”     (கலி.95)

என்பதும் அச்சமாதலின் இதன்கண் அடங்கும்.

(சென்று   கை   இகந்து  பெயர்த்து உள்ளிய வழியும்) சென்று -
தலைவன்   ஆற்றானாய்த்  துனியைத்  தீர்த்தற்கு அவளை அணுகச்
சென்று; கையிகந்து - அவன் மெய்க்கட் கிடந்த  தவறுகண்டு  தலைவி
ஆற்றாளாய்  நீக்கி நிறுத்தலானே: பெயர்த்து - அவன்  ஒருவாற்றான்
அவளாற்  றாமையைச்  சிறிது  மீட்கையினாலே;  உள்ளிய வழியும் -
அவள் கூடக்கருதிய விடத்தும்: தலைவன் கூற்று நிகழும்.

இதுவுந் துனிதீர்ப்பதொரு முறைமை கூறிற்று.

உ-ம்:

முற்கூறிய பாட்டுள்,

“அதிர்வில் படிறெருக்கி வந்தென் மகன்மேல்
முதிர்பூண் முலைபொருத ஏதிலாள் முச்சி
உதிர்துகள் உக்கநின் ஆடை ஒலிப்ப
எதிர்வளி நின்றாய்நீ செல்;
இனி எல்லாயாந், தீதிலேம் என்று தெளிப்பவுங் கைந்நீவி
யாதொன்றும் எங்கண் மறுத்தர வில்லாயின்
மேதக்க வெந்தை பெயரனை யாங்கொள்வேந்
தாவா விருப்பொடு கன்றியாத் துழிச்செல்ம்
ஆபோற் படர்தக நாம்.”                     (கலி.81)

எனத் தலைவன் கூறியவாறு காண்க.

காமத்தின்  வலியும் - அவள்  அதுனித்து  நீங்கியவழி முற்கூறிய
வாறன்றிக் காமஞ் சிறத்தலின் ஆற்றாமைவாயிலாகச் சென்று வலிந்துப்
புக்கு நெருங்கிக் கூடுமிடத்தும்: தலைவன் கூற்று நிகழும்.

இதுவுந் துனி தீர்ப்பதொரு முறைமை கூறிற்று.

உ-ம்:

“யாரிவ னெங்கூந்தல் கொள்வா னிதுவுமோர்
ஊராண்மைக் கொத்த படியுறுடைத் தெம்மனை
வாரல்நீ வந்தாங்கே மாறு”                 (கலி.89)

என வலிந்து சென்றதனைத் தலைவி கூறியவழி,

“ஏஎ, இவை, ஓருயிர்ப் புள்ளின் இருதலை யுள்