டி
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக்
காத லெங்கையர் காணின் நன்றென
மாதர் சான்ற வகையின் கண்ணும்
தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை
மாயப் பரத்தை உள்ளிய வழியும்
தன்வயின் சிறைப்பினு மவன்வயின் பிரிப்பினும்
இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணும்
காமக் கிழத்தியர் நலம்பா ராட்டிய
தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணுங்
கொடுமை யொழுக்கந் தோழிக் குரியவை
வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமைக்
காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்
ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்
வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக்
கிழவோள் செப்பல் கிழவ தென்ப.
இது, முறையானே தலைவிகூற்று நிகழும் இடங் கூறுகின்றது.
(இ-ள்.)
(அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் ஏற்றற் கண்ணும்
நிறுத்தற்கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையின் திரியா அன்பின்கண்ணும்) அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் - வேதத்தையுந்தரும நூலையுந் தலைவன் அறிந்த அறிவைத் தலைவி மிக அறியுமாதலின்;ஏற்றற்கண்ணும்-அந்தணர் முதலிய மூவருந் தத்தமக்குரிய வேள்வி
செய்யுங்கால் தம் மனைவியர் பலருள்ளுந் தமக்கு ஒத்தாளை வேள்விக்கண் உரிமை வகையான் ஏனை மகளிரின் உயர்த்தல் செய்யுமிடத்தும்; நிறுத்தற்கண்ணும்-தத்தங்
குலத்திற்கேற்ப நிறுத்துதலைச் செய்யுமிடத்தும்; உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் - அவர் குலத் திற்கேற்ற
உரிமைகளைக் கொடுத்த தலைவனிடத்து;
பெருமையில்
திரியா அன்பின்கண்ணும்
- தத்தங் குலத்திற்கேற்ற பெருமையினின்றும்
நீங்காத அன்பு
செய்து ஒழுகுதற்கண்ணும்:
அறியுமாகலின்
அன்புசெய்து ஒழுகுமெனக் கூட்டுக.
என்றது, அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு இருவருந் தலைவியராகியவழித் தங்குலத்திற் கொண்டவரே வேள்விக்கு உரியர்;
ஏனையோர் வேள்விக்கு உரியரல்ல ரென்பதூஉம் அவர்க்குத் தங்குலங்கட்கு ஏற்றவகையின் உரிமை கொடுப்பரென்
|