சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   171
Zoom In NormalZoom Out


கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழு திணை' என்ப

2 அவற்றுள்,
நடுவண் ஐந்திணை, நடுவணது ஒழியப்
படு திரை வையம் பாத்திய பண்பே

3 முதல், கரு, உரிப்பொருள், என்ற மூன்றே,
நுவலுங் காலை, முறை சிறந்தனவே;
பாடலுள் பயின்றவை நாடும் காலை

4 'முதல் எனப்படுவது நிலம், பொழுது, இரண்டின்
இயல்பு' என மொழிப இயல்பு உணர்ந்தோரே

5 மாயோன் மேய காடு உறை உலகமும்,
சேயோன் மேய மை வரை உலகமும்,
வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
வருணன் மேய பெரு மணல் உலகமும்,
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், எனச்
சொல்லிய முறையான் சொல்லவும்படுமே

6 காரும் மாலையும்-முல்லை 'குறிஞ்சி,
கூதிர், யாமம்' என்மனார் புலவர்

8 'பனி எதிர் பருவமும் உரித்து' என மொழிப

9 வைகறை, விடியல்,- மருதம்

10 எற்பாடு, நெய்தல் ஆதல் மெய் பெறத் தோன்றும்

11 நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவு நிலை மருங்கின்