சொல்லதிகாரம் - மூலம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   189
Zoom In NormalZoom Out


பன்னிரண்டு' என்ப.

102 முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே.

103 பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே.

104 முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவல் அருஞ் சிறப்பின் ஐந் நிலம் பெறுமே

105 இரு வகைக் குறி பிழைப்பு ஆகிய இடத்தும்;
காணா வகையில் பொழுது நனி இகப்பினும்;
தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின்,
காட்சி ஆசையின் களம் புக்குக் கலங்கி,
வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும்;
புகாஅக் காலை புக்கு எதிர்பட்டுழிப்
பகாஅ விருந்தின் பகுதிக்கண்ணும்;
வேளாண் எதிரும் விருப்பின்கண்ணும்;
தாளாண் எதிரும் பிரிவினானும்;
நாணு நெஞ்சு அலைப்ப விடுத்தற்கண்ணும்;
வரைதல் வேண்டித் தோழி செப்பிய
புரை தீர் கிளவி புல்லிய எதிரும்,
வரைவு உடன்படுதலும்; ஆங்கு அதன் புறத்துப்
புரை பட வந்த மறுத்தலொடு தொகைஇக்
கிழவோள் மேன' என்மனார் புலவர்.

106 காமத் திணையின் கண் நின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆகலின்,
குறிப்பினும் இடத்தினும் அல்லது, வேட்கை
நெறிப்பட வாரா, அவள்வயி னான.