அமையும்.
போற்றார்ப்பொறுத்தல் முதலிய குணங்களையுடையோய், பொருந,வரையாதுகொடுத்தோய், வானவரம்ப, பெரும, நீ, புளிப்பினும்இருளினும் திரியினும் இமயமும் பொதியமும் போன்று நடுக்கின்றிச்சுற்றமொடு விளங்கி நிற்பாயாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
போற்றார்ப்பொறுத்தல் முதலாகிய குணங்களை அரசியலடைவாற்கூறுகின்றாராதலின், பூதங்களின் அடைவு கூறாராயினார்.
இதனாற் சொல்லியது, தன்கடற்பிறந்தஞாயிறு தன்கடற்குளிக்கும்நாடனாதலாற் செல்வமுடையையாகவென்று வாழ்த்தவேண்டுவதின்மையின், நீடு வாழ்கவென வாழ்த்தியவாறாயிற்று.
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்றஏம முரச மிழுமென முழங்கநேமி யுய்த்த நேஎ நெஞ்சிற்றவிரா வீகைக் கவுரியர் மருகசெயிர்தீர் கற்பிற் சேயிழை கணவபொன்னோடைப் புகரணிநுதற்றுன்னருந்திறற் கமழ்கடாஅத்தெயிறுபடை யாக வெயிற்கத விடாஅக்கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற்பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்துமருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயாக்கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதிநிலம்பெயரினு நின்சொற்பெயரல்பொலங்கழற்காற் புலர்சாந்தின்விலங்ககன்ற வியன்மார்பஊரில்ல வுயவரியநீரில்ல நீளிடையபார்வ லிருக்கைக் கவிகண் ணோக்கிற்செந்தொடை பிழையா வன்க ணாடவர்அம்புவிட வீழ்ந்