புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   298
Zoom In NormalZoom Out

றினதுகோட்டையொத்தன;  பரிசைகள்  ஒலித்துத் தைத்த அம்புகளால்
துளைதோன்றுவன,    நிலையிற்    றப்பாத    இலக்கத்தையொத்தன;
குதிரைகள்  எதிரியை  எறியும் காலமுடையான் இடவாய் வலவாயாகிய
இடத்தைக் காட்ட முகக்கருவி பொரப்பட்ட செவ்வாயை உடைமையான்
மான்முதலாயினவற்றின்   கழுத்தைக்   கவ்வி  உதிரம்  உவற்றியுண்ட
புலியை  யொத்தன;  களிறுகள்,  கதவை முறித்து  வெகுண்டு உலாவி
நுனைதேய்ந்த    வெளியகோட்டையுடைமையான்    உயிரையுண்ணும்
கூற்றையொத்தன; நீதான், அசைந்த தலையாட்டமணிந்த கதியையுடைய
குதிரையாற்  பூட்டப்பட்ட     பொற்றேரின்மேலே     பொலிவொடு
தோன்றுதலாற்   கரிய   கடலின்கண்ணே   ஓங்கியெழுகின்ற செய்ய
ஞாயிற்றினது  ஒளியையுடையை;  அத்தன்மையையாதலால், தாயில்லாத
உண்ணாக்     குழவிபோல   ஒழியாது    கூப்பிடும்     நின்னைச்
சினப்பித்தவருடைய நாடு - எ - று.
 

நாடென்று  (19)  நாட்டுள்  வாழ்வாரை,  மாறென்பது  (17)  .ஏதுப்
பொருள்படுவதோர் இடைச்சொல்.
 

கழல்பரிந்தன  (3)  வென்றோதி,  வீரக்கழல்   நீங்கியவையென்று
உரைப்பாருமுளர்.
 

வாளாகிய     மறுப்பட்டவை    (1)    யெனவும்,    கழலாகிய
பறைந்தவையெனவும்  (3)  தோலாகிய  துளைதோன்றுவ (5) வெனவும்
கொள்க.
 

எறிபபதத்தா (7) னென்பதற்கு ஒத்தும் காலையுடையானென்