புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   301
Zoom In NormalZoom Out

தோர் வம்பப் பதுக்கைத்

திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந் துயவும்

உன்ன மரத்த துன்னருங் கவலை

நின்னசை வேட்கையி னிரவலர் வருவரது

முன்ன முகத்தி னுணர்ந்தவர்

இன்மை தீர்த்தல் வன்மை யானே.
 

திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, செவியறிவுறூஉ)
 

பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர்வழுதியை இரும்பிடர்த்
தலையார் பாடியது.
 

(இ - ள்.) உவாநாளின் மதியினது  வடிவுபோலும்  வடிவினையுடைய
உயர்ந்த வெண்கொற்றக்குடை நிலைபெற்ற கடலெல்லைக்கண் நிலத்தை
நிழற்    செய்ய,    காவலாகிய   வீரமுரசம்   இழுமென  முழங்கும்
ஓசையையுடைத்தாய்    முழங்க,  சக்கரத்தைச்  செலுத்திய  ஈரமுடைய
நெஞ்சினையும்     ஒழியாத     வண்மையையுமுடைய    பாண்டியர்
மரபினுள்ளாய்!  குற்றமற்ற  கற்பினையுடைய  சேயிழைக்குத்  தலைவ!
பொன்னானியன்ற  பட்டத்தையுடைய  புகரணிந்த   மத்தகத்தினையும்,
அணுகுதற்கரிய  வலியையும், மணநாறும் மதத்தினையுமுடைய, கொம்பு
படைக்கலமாகக்   கொண்டு  பகைவர்  மதிலின்கட்  கதவைக் குத்திக்
கயிற்றாற் பிணித்தலைச்செய்த கவிழ்ந்த மணியையணிந்த பக்கத்தையும்
பெருங்கையையுமுடைய  யானையினது  பெரிய கழுத்திடத்தே யிருந்து
பரிகாரமில்லாத  கூற்றத்தினது  பொறுத்தற்கரிய  கொலைத்தொழிலுக்கு
இளையாத   வலிய   கையின்  கண்ணே  ஒள்ளிய  வாளினையுடைய
பெரும்பெயர்வழுதி!  நிலம்  பிறழினும்  நினது  ஆணையாகிய  சொற்
பிறழாதொழியல்வேண்டும்