புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   309
Zoom In NormalZoom Out

செய்வுறு நன்கலம்
பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே
வாடுக விறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே
செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை
மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே
ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய
தண்டா வீகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெருமநீ நிலமிசை யானே. 

திணையும்     துறையும்     அவை;     துறை    வாழ்த்தியலுமாம்.
(பாடாண்டிணை) 

பாண்டியன்  பல்யாகசாலை  முதுகுடுமிப்  பெருவழுதியைக் காரிகிழார்
பாடியது. 

(இ - ள்.)  வடக்கின்கண்ணது  பனிதங்கிய  நெடிய  இமயமலையின்
வடக்கும், தெற்கின்கண்ணது உட்குந்திறம் பொருந்திய கன்னியாற்றின் 

தெற்கும்,    கீழ்க்கண்ணது      கரையைப்பொருகின்ற    சகரரால்
தோண்டப்பட்ட   சாகரத்தின்   கிழக்கும்,  மேல்கண்ணது  பழைதாய்
முதிர்ந்த   கடலின்   மேற்கும்,   கீழதாகிய   நிலமும்   ஆகாயமும்
சுவர்க்கமுமென     மூன்றுங்கூடிய    புணர்ச்சியாக    அடுக்கப்பட்ட
அடைவின்கண் முதற்கட்டாகிய நீர்நிலைக்கண் ஓங்கிய நிலத்தின்கீழும்,
மேலதாகிய  கோலோகத்தின்கண்ணும்  அமையாது உட்கும் புகழுமாகப்
பரந்த அளவையுடைய பொருள்களை ஆராயும்