அரணை அழித்துவலியோடு எதிர்ந்தவருடைய புறக்கொடையைப் பெற்றான்; அப்புறக்கொடையைப் பெற்ற வலிய அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும், தோற்றப் பொலிவுடைய சிறந்த பலகழஞ்சாற் செய்யப்பட்ட நன்மையையுடைய அணிகலத்தைப் பெற்றாள்; அவ்வணிகலத்தைப் பெற்ற விறலிக்கு முதற்றானமாகிய குரலிலே வந்து பொருந்தும் அளவையுடைய பாட்டைவல்ல பாணனும், விளங்கிய தழலின்கண்ணே ஆக்கப்பட்ட பொற்றாமரையாகிய வெள்ளிநாராற் றொடுத்த பூவைப் பெற்றான் - எ - று. பாடினி இழைபெற்றாள், பாணன் பூப்பெற்றான், யான் அதுபெறு கின்றிலேனெனப் பரிசில்கடாநிலையாயிற்று;இனி, இவள் பேயாயிருக்கக் கட்புலனாயதோர் வடிவுகொண்டு பாடினாளொருத்தியெனவும், ‘இக் களத்து வந்தோர் யாவரும் பரிசில் பெற்றார்கள்; ஈண்டு நின்னோடு எதிர்ந்து பட்டோரில்லாமையான், எனக்கு உணவாகிய தசை பெற்றிலேன்‘ எனத் தான் பேய்மகளானமை தோன்றப் பரிசில்கடாயினாளெனவுங் கூறுவாருமுளர். ‘பாடினிக்கு,.....பாண்மகன்’ என்பது, ‘அதுவெனுருபுகெடக் குகரம் வந்தது; உயர்திணையாகலின். பாடினிபாடலுக்கேற்பக் கொளைவல் பாண்மகனெனினும் அமையும். எனவும், ஆங்கும் : அசைநிலை; பெற்றிசின் மூன்றும் படர்க்கைக்கண் வந்தன. (12)
பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி
இன்னா வாகப் பிறர்மண்கொண்
டினிய செய்திநின் னார்வலர் முகத்தே. திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை) பாண்டியன் |