றையொடு வேண்மாடத்து மேலிருந்து உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. (இ - ள்.) இவன் யாரென்று வினவுவாயாயின், இவன்றான், புலியினது தோலாற் செய்யப்பட்ட மெய்புகுகருவி பொலிந்த கொளுத்தற எய்த அம்புகள் போழப்பட்ட பரந்துயர்ந்த மார்பினையுடைய கூற்றம் போன்ற களிற்றின்மேலோன்; இக்களிறுதான், கடலின்கண்ணே இயங்கும் மரக் கலத்தையொப்பவும் பலமீனினது நடுவே செல்லும் மதியத்தை யொப்பவும் சுறவினத்தையொத்த வாண்மறவர் சூழத் தன்னை மருவிய பாகரை யறியாது மதம்பட்டது; இவன் நோயின்றிப் பெயர்வானாக; வயலிடத்து மயிலுதிர்த்த பீலியை ஆண்டுள்ள உழவர் நெற்சூட்டுடனே திரட்டும் கொழுவிய மீனையும் விளைந்த கள்ளையுமுடைய மிக்க நீராகிய வேலியையுடைய நாட்டையுடையோன் - எ - று. களிற்றுமிசையோனாகிய இவன்யாரென்குவையாயின், நாடுகிழவோன்; இவன் களிறு மதம்பட்டது; அதனால், இவன் நோயின்றிப் பெயர்கவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. களிற்றுக்கு நாவாயோடு உவமை எதிர்ப்படையைக் கிழித்தோடலும், திங்களோடு உவமை வாளோர் சூழத் தன் தலைமைதோன்றச் செல்லுதலுமாகக் கொள்க. தில் : விழைவின்கண் நின்றது. பெருநற்கிள்ளி களிறு கையிகந்து பகையகத்துப் புகுந்தமையான் அவற்குத் தீங்குறுமென்று அஞ்சி வாழ்த்தினமையால், இது வாழ்த்தியலாயிற்று; இவற்குத் தீங்குறின் நமக்குத் தீங்குறுமென்னுங் கருத்தால் நோயிலனாகிப் பெயர்கவென்றாராயின், வாழ்த்தியலாகாது; துறை, பாட்டுடையானது என்றுணர்க. (14)
கடுங்கண்ண
|