புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   321
Zoom In NormalZoom Out

கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்
புள்ளின மிமிழும் புகழ்சால் விளைவயல்
வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத்
தேர்வழங் கினைநின் றெவ்வர் தேஎத்துத்
துளங்கியலாற் பணையெருத்திற்
பாவடியாற் செறனோக்கின்
ஒளிறுமருப்பிற் களிறவர
காப்புடைய கயம்படியினை
அன்ன சீற்றத் தனையை யாகலின்
விளங்குபொன் னெறிந்த நலங்கிளர் பலகையொடு
நிழல்படு நெடுவே லேந்தி யொன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில்
நற்பனுவ னால்வேதத்
தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூப நட்ட வியன்களம் பலகொல்
யாபல கொல்லோ பெரும வாருற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவிற்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே. 

திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, இயன்மொழி) 

பாண்டியன்  பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியை நெட்டிமையார்
பாடியது. 

(இ - ள்.) விரைந்த  தேர்    குழித்த   தெருவின்கண்ணே வெளிய
வாயையுடைய   கழுதையாகிய   புல்லிய   நிரையைப்  பூட்டி  உழுது
பாழ்படுத்தினை    அவருடைய   அகலிய   இடத்தையுடைய   நல்ல
அரண்களை; 

புள்ளினங்கள்  ஒலிக்கும் புகழமைந்த  விளைகழனிக்கண்ணே வெளிய
தலை  யாட்டம்  அணிந்த  மனஞ்செருக்கிய குதிரையினுடைய கவிந்த
குளம்புகள் தாவத் தேரைச் செலுத்தினை நின்னுடைய பகை