புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   323
Zoom In NormalZoom Out

காவல
குலையிறைஞ்சிய கோட்டாழை
அகல்வயன் மலைவேலி
நிலவுமணல் வியன்கானற்
றெண்கழிமிசைச் சுடர்ப்பூவிற்
றண்டொண்டியோ ரடுபொருந
மாப்பயம்பின் பொறைபோற்றாது
நீடுகுழி யகப்பட்ட
பீடுடைய வெறுழ்முன்பிற்
கோடுமுற்றிய கொல்களிறு
நிலைகலங்கக் குழிகொன்று
கிளைபுகலத் தலைக்கூடியாங்கு
நீபட்ட வருமுன்பிற்
பெருந்தளர்ச்சி பலருவப்பப்
பிறிதுசென்று மலர்தாயத்துப்
பலர்நாப்பண் மீக்கூறலின்
உண்டாகிய வுயர்மண்ணும்
சென்றுபட்ட விழுக்கலனும்
பெறல்கூடு மிவனெஞ் சுறப்பெறி னெனவும்
ஏந்துகொடி யிறைப்புரிசை
வீங்குசிறை வியலருப்பம்
இழந்துவைகுது மினிநாமிவன்
உடன்றுநோக்கினன் பெரிதெனவும்
வேற்றரசு பணிதொடங்குநின்
ஆற்றலொடு புகழேத்திக்
காண்கு வந்திசிற் பெரும வீண்டிய
மழையென மருளும் பஃறோன் மலையெனத்
தேனிறை கொள்ளு மிரும்பல் யானை
உடலுந ருட்க வீங்கிக் கடலென
வானீர்க் கூக்குந் தானை யானாது
கடுவொடுங் கெயிற்ற வரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
வரையா வீகைக் குடவர் கோவே. 

திணை - வாகை; துறை - அரசவாகை; இயன்மொழியுமாம். 

பாண்டியன்  தலையாலங்கானத்துச்   செருவென்ற  நெடுஞ்செழியனாற்
பிணியிருந்த   யானைக்கட்சேய்  மாந்தரஞ்சேரலிரும்பொறை  வலிதிற்
போய்க்    கட்டிலெய்தினானைக்    குறுங்கோழியூர்    (பி   -   ம்.
குறுங்கோளியூர்) கிழார் பாடியது. 

(இ - ள்.) தென்றிசைக்கட்   கன்னியும்   வடதிசைக்கண்   இமயமும்
கீழ்த்திசைக்கண்ணும்  மேற்றிசைக்கண்ணும்  கடலும் எல்லையாக நடுவு
பட்ட    நிலத்துக்    குன்றும்    மலையும்   காடும்   நாடும்   என
இவற்றையுடையோர் ஒரு பெற்றிப்பட்டு வழிபாடு கூறத் தீத்தொழிலைப்
போக்கிக் கோலைச் செவ்விதாக்கி ஆறிலொன்றாகிய இறையை உண்டு