புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   327
Zoom In NormalZoom Out

உண்ணினல்லது      பகைவர்     உண்ணப்படாத    பெறுதற்கரிய
மண்ணையுடையை; அம்பு தங்குங் காவலையுடைய அரணுடனே அறம்
தங்கும்  செவ்விய  கோலையுடையை;  புதுப்புள் வரினும் பழைய புள்
அவ்விடத்தை  விட்டுப்  போகினும் அவற்றால் நடுக்கமுறுதல் அறியாத
சேமமாகிய  காவலை  யுடையை; அத்தன்மையை யுடையை யாதலான்,
உலகத்து  நிலைபெற்ற  உயிரெல்லாம்,  தத்தம் காதலால் நினக்கு ஏதம்
வருங்கொலென்று அஞ்சும் - எ - று.
 

அறிவும்  ஈரமும்   கண்ணோட்டமுமென்பன   சினைவினைப்பாற்பட்டு
அளத்தற்கரியை யென்னும் முதல்வினை கொண்டன.
 

(21)

புலவரை யிறந்த புகழ்சா றோன்றல்

நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி

வான்றோய் வன்ன புரிசை விசும்பின்

மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற்

கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை

அருங்குறும் புடுத்த கானப் பேரெயில்

கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய

இரும்பு ணீரினு மீட்டற் கரிதென

வேங்கை மார்ப னிரங்க வைகலும்

ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்

பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே