புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   328
Zoom In NormalZoom Out

னவும்  தேனழிந்த  மலைபோலத்  தேனீயொலிக்கும்  மணம்  நாறும்
மதத்துடனே  புண்வழலை  வடியும் பெரிய தலையையுடையனவுமாகிய
வலிமிக்க  இளங்களிறு கம்பத்தைப் பொருந்தித் தான் நின்றநிலையிலே
நின்று    அசையப்    பக்கத்தே   நின்று   கிரணத்தை   விடுகின்ற
வானத்தின்கண்ணே  தங்கும்  திங்கள்போலும் முத்தமாலையையுடைய
வெண்கொற்றக்குடையினது  நிழற்கண்ணே தம்பக்கத்து வாளில்லாதோர்
அக்குடையே காவலாக உறங்க அசைந்த செந்நெற்கதிரால் வேயப்பட்ட
மெல்லிய  கரும்பாற்கட்டப்பட்ட  ஒழுங்குபட்ட  கூரை விழாவெடுத்துக்
கொள்ளப்பட்ட  இடம்போல்  வேறுவேறாகப் பொலிவு தோன்றக் குற்று
அமையாத    உலக்கையொலியுடனே    மிக்க   ஆரவாரத்தையுடைய
அகன்றவிடத்துப்   பொன்னாற்  செய்யப்பட்ட  இதழையுடைய  பசிய
தும்பையுடனே     மிசையே      அசைந்த     தலையினையுடைய
பனந்தோட்டைச் செருகிச் சினத்தையுடைய வீரர் வெறியாடும் குரவைக்
கூத்தொலிஓதத்தையுடைய  கடலொலி  போலக்  கிளர்ந்து  பொங்கப்
படைப்பெருமையாற் பகைவருட்கும் மதிப்புடைமையின் இடங்காவாது
 

பரந்துகிடக்கின்ற  அகன்ற   பாசறையிடத்துக்  காவலாள!  மாற்றரசர்
பணிந்துதந்த   திறையால்   தம்மை   அடைந்தவருடைய  சுற்றத்தை
நிறைக்கும்     உயர்ந்த    கொல்லிமலையோருடைய    அடுபொருந!
யானையினது    நோக்குப்போலும்   நோக்கினையுடைய   வெற்றியை
விரும்பும்   சேயே!   வாழ்க,   பெருமானே!  நினது  எல்லையில்லாத
செல்வம்;  நின்னைப்  பாடிய  விளங்கிய  செவ்விய  நாப் பின்னைப்
பிறருடைய    புகழைச்    சொல்லாமற்    பாதுகாவாது   கொடுக்கும்
வலியையுடைய   எங்கோவே!  மாந்தரஞ்சேரலிரும்பொறை  பாதுகாத்த
நாடு  தேவருலகத்தையொக்குமென்று  பிறர்  சொல்லக் கேட்டு வந்து
கட்கினிதாகக்  கண்டேன்;  பெருமானே!  முயற்சி  வெறுப்பில்லையாய்
வேற்றுநாட்டின்கட் சென்றுவிடும் படையுடனே சோறுண்டாக நடப்