புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   333
Zoom In NormalZoom Out

பை; நீ மடியாயாதலான்-எ-று.

கதிர்சோருமதியென   இயையும்;   கதிர்சோருமென்னும்  சினைவினை
மதியென்னும்     முதலொடு     முடிந்தது;    கதிர்சோருமாலையென
இயைப்பினும் அமையும்.

பாய்நின்றென்று பாடமோதுவாரும் உளர்.

கூரை    பொலிவுதோன்றவென    இடத்துநிகழ்பொருளின்   தொழில்
இடத்துமேல் ஏறிநின்றது.

செரீஇயென்னும்  வினையெச்சத்தை  ஆடுமென  ஒருசொல் வருவித்து
அதனோடுமுடிக்க.

நிலைஇ  வழங்கக்   காப்புறங்கப்  பொலிவுதோன்றப் பெயர்புபொங்க
என்னும்   செயவெனெச்சங்களும்,   வாய்காவாதென்னும்   எதிர்மறை
வினையெச்சமும்     பரந்துபட்டவென்னும்    பெயரெச்சவினையொடு
முடிந்தன.

காப்பாள!   பொருந!   சேஎய்!   பெரும!  எங்கோ!   பெரும!   நீ
துஞ்சாயாதலாற் சோறுபட நடத்தி; அதனால் இரும்பொறை ஓம்பியநாடு
புத்தேளுலகத்தற்றெனக்  கேட்டுவந்து இனிது கண்டிசின்; நின்படைப்பு
வாழியவெனக்  கூட்டி  வினைமுடிவுசெய்க;  அன்றி,  எங்கோவே!  நீ
துஞ்சாதபடியாலே, இரும்பொறையோம்பியநாடு புத்தேளுலகத்தற்றெனப்
பிறர் சொல்லக்கேட்டு நிற்பாடிய அலங்குசெந்நாப் பிறரிசை நுவலாதபடி
வந்து   இனிது  கண்டேன்;  நினது  படைப்பொடு  வாழ்வாயாகவென
இயைப்பினும் அமையும்.

இசின் தன்மைக்கண் வந்தது.

சோறுபடநடத்தி    யென்பதனை    வினையெச்சமாக   உரைப்பினும்
அமையும்.

உயர்மருப்பினென்பதூஉம்,செறனோக்கினென்பதூஉம்,  பணையெருத்தி
னென்பதூஉம் பாடம்.

(23) வெளிறி னோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
களிறுபடிந் துண்டெனக் கலங்கிய துறையும்
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியற்
சூர்நவை முருகன் சுற்றத் தன்னநின்
கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர்
கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
கொள்பத மொழிய வீசிய புலனும்
வடிநவில் நவியம் பாய்தலி னூர்தொறும்
கடிமரந் துளங்கிய காவு நெடுநகர்
வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக்
கனையெரி யுரறிய மருங்கு நோக்கி
நண்ணார் நாண நாடொறுந் தலைச்சென்
றின்னு மின்னபல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவி னோனென
ஞால நெளிய வீண்டிய வியன்படை
ஆலங் கானத் தமர்கடந் தட்ட
கால முன்பநிற் கண்டனென் வருவல்

அறுமருப் பெழிற்கலை புலிப்