வேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பி னடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமு முழுபடை
ஊன்றுசான் மருங்கி னீன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும்
காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்
அதுநற் கறிந்தனை யாயி னீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பார மோம்பிக்
குடிபுறந் தருகுவை யாயினின்
அடிபுறந் தருகுவ ரடங்கா தோரே. திணை - அது; துறை - செவியறிவுறூஉ. (பாடாண்டிணை) அவனை வெள்ளைக்குடிநாகனார் பாடிப் பழஞ்செய்க்கடன் வீடு கொண்டது. (இ - ள்.) நீர்செறிந்த பெரிய கடல் எல்லையாகக் காற்று ஊடுபோகாத வானத்தைச்சூடிய மண்செறிந்த உலகத்தின்கட்குளிர்ந்த தமிழ்நாட்டிற்கு உரியராகிய முரசொலிக்கும் படையினையுடைய மூவேந்தருள்ளும் அரசென்றற்குச் சிறப்புடையது, நின்னுடைய அரசே; பெரும! விளங்கிய சுடரையுடைய ஞாயிறு நான்குதிக்கினும் தோன்றினும், விளங்கிய கதிரையுடைய வெள்ளிமீன் தென்றிசைக்கட் செல்லினும், அழகிய குளிர்ந்த காவிரி வந்து பலகாலாயோடி ஊட்டத் தொகுதிகொண்ட வேலினது காட்சியை யொப்ப அசைந்த கண்ணினையுடைய கரும்பினது வெளிய பூ அசையும் நாடென்று சொல்லப்படுவது நின்னுடைய நாடே! அந்நாடு பொருந்திய செல்வத்தையுடைய பெருமைபொருந்திய வேந்தே; நின்னுடையன சில காரியஞ்சொல்லுவேன்; என்னுடையன சிலவார்த்தை கேட்பாயாக; அறக்கடவுள்மேவி ஆராய்ந்தாற்போன்ற செங்கோலான் ஆராயும் ஆராய்ச்சி
|