புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   392
Zoom In NormalZoom Out


ஆமூரிடத்து   வலியையுடைய   மல்லனது   மிக்க வலியைக் கெடுத்து
ஒருகால்   மண்டியாக   மார்பிலே  மடித்துவைத்து  ஒருகால்  அவன்
செய்கின்ற  உபாயத்தை  விலக்கி   முதுகின்கண்  வளைத்துப்  பசித்து
மூங்கிலைத்   தின்றற்கு   முயலும்   யானையையொப்பத்    தலையுங்
காலுமாகிய   இரண்டிடமும்   முறிய  மோதி  அக்களத்தின்கட்  புக்க
அம்மல்லனை    எதிர்ந்துநின்று     கொன்ற   நிலையை,   கண்டால்
உவப்பினும்    உவவானாயினும்,   இவன்   தந்தையாகிய   வெல்லும்
போரினையுடைய பொருதற்கரிய தித்தன் காண்பானாக - எ - று.

என்றது,   தந்தையுடன்  வெறுத்துப்போந்தான்   அமருட்  புகுந்து
இப்போர்  செய்தானை  அவன்  விரும்பின்  உவக்கின்றான்; விரும்பா
விடின் அஞ்சுகின்றானென்பதாம். 

‘பணைமுயலும் யானைபோல வொருதலை யொசிய வொற்றி’ என்று
பாடமோதி,   அம்மல்லன்  முற்கூறாயினும்  பிற்கூறாயினும்  ஒருதலை
முறிய மோதியென்றுஉரைப்பாரும் உளர்.  

தில்: விழைவின்கண் வந்தது. 

(81) ஆர்ப்பெழு கடலினும் பெரிதவன் களிறே
கார்ப்பெய லுருமின் முழங்கலா னாவே

யார்கொ லளியர் தாமே யார்நார்ச்

செறியத் தொடுத்த கண்ணிக்

கவிகை மள்ளன் கைப்பட் டோரே.

திணை - வாகை; துறை - அரசவாகை.

அவனை அவர் பாடியது.

(இ-ள்.)   படையினது   ஆரவாரம்,   எழுகடலுங்   கூடி  ஒலிக்கும்
ஒலியினும்  பெரிது;  அவனுடைய  களிறு,  கார்காலத்து மழையின்கண்
இடியினும்   முழங்குதலை  அமையா;  நாராற்  பயிலத்தொடுக்கப்பட்ட
ஆத்திக்கண்ணியையும்   இடக்கவிந்த   கையினையுமுடைய   வீரனது
கையின்கட் பட்டோராகிய இரங்கத்தக்கார்தாம் யார்கொல்?-எ - று.

(82) சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்

கட்டி னிணக்கு மிழிசினன் கையது

போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ

ஊர்கொள வந்த பொருநனொ

டார்புனை தெரிய னெடுந்தகை போரே.

திணையும் துறையும் அவை. (வாகை, அரச வாகை)

அவனை அவர் பாடியது.

(இ-ள்.)    ஊரின்கண்    விழாத்   தொடங்கிற்றாக  அவ்விழாவிற்கு
உதவப்  போகவும் தன்மனைவி பிள்ளைபெறுதலைப் பொருந்தினாளாக
அவள்   மெய்ந்நோவிற்கு   உதவப்போகவும்   வேண்டி,  பெய்கின்ற
மழையையுடைய  ஞாயிறு  வீழ்ந்தபொழுதின்கட்  கட்டிலைப்பிணிக்கும்
புலைமகன்  கையதாகிய  வாரைச்  செலுத்தும் ஊசியினும்  விரைந்தது,
ஊரைக்    கொள்ளவந்த    வீரனோடு    ஆத்தியாற்றொடுக்கப்பட்ட
கண்ணியையுடைய பெருந்த