திணை - அது; துறை - கடைநிலை. (பாடாண்டிணை)
ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
(இ-ள்.) களாப்பழம்போலும் கரிய கோட்டையுடைத்தாகிய சிறிய
யாழைக்கொண்டு பாடும் இனிய பாட்டைவல்ல பாணர் பரிசில்பெற்றுக்
கொண்டு போனார்களாக, களிறுகள் இல்லையாகிய புல்லிய
பக்கத்தையுடைய நெடிய தறியின்கண்ணே காட்டுமயில்கள் தத்தம்
இனத்தோடு தங்கப் பிறிதோரணிகலமுமின்றிக் கொடுத்தற்கரிய மங்கலிய
சூத்திரத்தையணிந்த மகளிருடனே பொலிவழிந்து சாய்ந்ததென்று
சொல்லுப, ஆயுடைய கோயிலை; நுகர்தற்கு இனிதாகிய
தாளிப்பையுடைய அடிசிலைப் பிறர்க்கு உதவலின்றித் தம்முடைய
வயிற்றையே நிறைத்துச் சொல்லுதற்கமைந்த மேம்பட்ட புகழைநீங்கிய
முரசுபொருந்திய செல்வத்தினையுடைய அரசர்கோயில், இதனை
ஒவ்வாது-எ - று.
என்றதன் கருத்து : செல்வர் நகர் பெருந்திருவுடைமையிற் சிறந்தது
போன்றிருப்பினும், ஆய்கோயில் வறிதெனினும் இஃது அதனினுஞ்
சிறந்ததென்பதாம்.
ஆய்கோயில் சாயின்றென்ப; ஆயினும் முரசுகெழுசெல்வர் நகர்
இதனை ஒவ்வாதெனக் கூட்டுக.
(128) மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் றெண்கண் கனிசெத் தடிப்பின்
அன்னச் சேவன் மாறெழுந் தாலும்
கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில்
ஆடுமகள் குறுகி னல்லது
பீடுகெழு மன்னர் குறுகலோ வரிதே.
திணை - அது; துறை - வாழ்த்து; இயன்மொழியுமாம்.
(பாடாண்டிணை)
அவனை அவர் பாடியது.
(இ-ள்.) ஊர்ப்பொதுவின்கண் பலவினது பெரிய