புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   422
Zoom In NormalZoom Out

புல்லையும்  மேய்ந்த   கவரிமாக்    குவளைப்பூவையுடைய    பசிய
சுனையின்   நீரை  நுகர்ந்து  அதன்  பக்கத்தவாகிய  தகரமரத்தினது
குளிர்ந்த   நிழலின்கண்  தனது  பிணையுடனே  தங்கும்  வடதிசைக்
கண்ணதாகிய  வானைப்  பொருந்தும் இமயமலையும் தென்றிசைக்கண்
ஆய்குடியும்  இல்லையாயின்  இந்தப்  பரந்த இடத்தையுடைய உலகம்
கீழ்மேலதாகிக் கெடும்-எ-று,

 

'முன்னுள்ளு   வோனைப்    பின்னுள்ளினேன்'     என    உள்ளம்
ஆழ்தற்குக்காரணங்   கூறினமையால்,  பிறரைப்புகழ்ந்த  நாவெனவும்,
பிறர்புகழ்    கேட்ட   செவியெனவும்   ஏனையவற்றிற்கும்  காரணம்
வருவித்து உரைக்கப்பட்டது,

 

அன்றி   வடதிசை  தேவருலகோடு  ஒத்தலான்,  இமயத்தால்  தாங்க
வேண்டுவதில்லை; தென்றிசைக்கண் ஆய்குடி தாங்கிற்றில்லையாயின்,

 

இவ்வுலகு  பிறழும்; அதனால் இமயத்துக்கு முன்னுள்ளப்படுவோனைப்
பின்னுள்ளினேனாதலால்,   எனது  உள்ளம்  ஆழ்க;   எனது   நாப்
போழ்க; எனது செவி தூர்வதாக வென்றதாக்கி உரைப்பினும் அமையும்.