திருக்குறள்
ஓலை எண் :   3

Zoom In NormalZoom Out

மூவர்க்கும்   பொதுப்படக்  கூறினார்  என  உணர்க.  அகர  முதல
எழுத்தெல்லாம்  ஆதி பகவன் முதற்றே உலகு. எழுத்துக்கள் எல்லாம்
அகரம்  ஆகிய  முதலை உடையன; அது போல உலகம் ஆதிபகவன்
ஆகிய  முதலை உடைத்து. இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு
உவமை.  அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை
ஆகிய  இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை
உணர்வான்  அன்றி  இயற்கை  உணர்வான்  முற்றும் உணர்தலானும்
கொள்க.தமிழ்  எழுத்திற்கே  அன்றி  வட  எழுத்திற்கும்  முதலாதல்
நோக்கி,  ''எழுத்து''  எல்லாம்  என்றார்.  ஆதிபகவன்  என்னும் இரு
பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. ''உலகு'' என்றது ஈண்டு
உயிர்கள்   மேல்  நின்றது.  காணப்பட்ட  உலகத்தால்  காணப்படாத
கடவுட்கு  உண்மை  கூற வேண்டுதலின், ''ஆதிபகவன் முதற்றே'' என
உலகின்  மேல்  வைத்துக்  கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல்
ஆதிபகவன்  என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண்
வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது. கற்றதனா
லாய  பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். எல்லா
நூல்களையும்  கற்றவர்க்கு  அக்கல்வி  அறிவான் ஆய பயன் யாது?;
மெய்யுணர்வினை  உடையானது  நல்ல  தாள்களைத்  தொழாராயின்?
எவன்  என்னும்  வினாப்பெயர்  என்  என்று ஆய், ஈண்டு இன்மை
குறித்து  நின்றது.  ''கொல்''  என்பது  அசைநிலை.  பிறவிப் பிணிக்கு
மருந்து  ஆகலின்  ''நற்றாள்''  என்றார்.  ஆகம  அறிவிற்குப் பயன்
அவன்   தாளைத்   தொழுது   பிறவியறுத்தல்   என்பது  இதனான்
கூறப்பட்டது.