திருக்குறள்
ஓலை எண் :   22

Zoom In NormalZoom Out

அவற்றை  ஒறுக்க  வேண்டாது  ஐம்புல  இன்பங்கள் ஆரத்துய்க்கும்
மென்மையுடைய    இல்வாழ்க்கையோடு    அறம்    என  ஒருங்கு
எண்ணப்படுவது  என்றவாறு  ஆயிற்று.  இவை  நான்கு பாட்டானும்
இல்நிலையே   பயனுடைத்து   என  இதன்  சிறப்புக்  கூறப்பட்டது.
வையத்துள்   வாழ்வாங்கு  வாழ்பவன்  வான்உறையும்  தெய்வத்துள்
வைக்கப்    படும்.   இல்லறத்தோடு   கூடி   வாழும்  இயல்பினால்
வையத்தின்கண்  வாழ்பவன்;  வையத்தானே  எனினும்  வானின்கண்
உறையும்  தேவருள்  ஒருவனாக  வைத்து நன்கு மதிக்கப்படும். பின்
தேவனாய்  அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின், ''தெய்வத்துள்
வைக்கப்படும்''   என்றார்.  இதனான்  இல்நிலையது  மறுமைப்பயன்
கூறப்பட்டது.   இம்மைப்   பயன்   புகழ்,   அதனை   இறுதிக்கண்
கூறுப. அதி.24.புகழ் அஃதாவது,  அவ்வில்வாழ்க்கைத் துணை ஆகிய
இல்லாளது  நன்மை.  அதிகார  முறைமையும்  இதனானே விளங்கும்.
மனைத்தக்க  மாண்புடையள்  ஆகித்தற்  கொண்டான் வளத்தக்காள்
வாழ்க்கைத் துணை. மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை
உடையவளாய்த்   தன்னைக்   கொண்டவனது  வருவாய்க்குத்  தக்க
வாழ்க்கையை   உடையாள்;   அதற்குத்துணை.   நற்குணங்களாவன:
துறந்தார்ப்    பேணலும்,    விருந்து   அயர்தலும்,   வறியார்மாட்டு
அருளுடைமையும்  முதலாயின.   நற்செய்கைகளாவன:  வாழ்க்கைக்கு
வேண்டும்  பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில்
வன்மையும்,  ஒப்புரவு  செய்தலும்  முதலாயின.  வருவாய்க்குத் தக்க
வாழ்க்கையாவது:   முதலை  அறிந்து  அதற்கு  இயைய  அழித்தல்.
இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்