தீவினைப் பால்.
ஒருவன்
தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின்,
தீவினையாகிய பகுதி
எத்துணையும் சிறிது ஒன்றாயினும்
பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. நல்வினை
தீவினை என வினைப்பகுதி இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச் செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல் விளக்கினார் ஆகலின், ''தன்னைத்தான் காதலன் ஆயின்'' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத் தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது கூறப்பட்டது. அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின். ஒருவன் செந்நெறிக் கண்
செல்லாது கொடுநெறிக்கண் சென்று பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின், அவன் அரிதாகிய கேட்டையுடையவன் என்பது அறிக. அருமை: இன்மை.. அருங்கேடன் என்பதனை, ''சென்று சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்'' அகநா.42 என்பது போலக் கொள்க. ''ஓடி'' என்னும் வினையெச்சம்
''செய்யான்'' என்னும் எதிர்மறை வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது. அஃதாவது உலக நடையினை அறிந்து செய்தல்.
உலகநடை வேதநடை போல அறநூல்களுட் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யுந் தன்மைத்தாகலின், ஒப்புரவு
அறிதலென்றார். மேல், மனம் மொழி மெய்களால் தவிரத் தகுவன கூறினார், இனிச் செய்யத் தகுவனவற்றுள் எஞ்சி நின்றன
கூறுகின்றார். ஆகலின், இது தீவினையச்சத்தின் பின் வைக்கப்பட்டது. கைம்மாறு வேண்டா கடப்பாடு
மாரிமாட் டென்னுற்றுங் கொல்லோ உலகு. தமக்கு நீர்
உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன, ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல. ''என் ஆற்றும்?'' என்ற வினா, ''யாதும் ஆற்றா'' |