பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2
Zoom In NormalZoom Out


 

மதக்களி றிரண்டுடன் மண்டி யாஅங்
கில்வழி வந்ததம் பெருமை பீடுறத்
தொல்வழி வயத்துத் தொடர்வினை தொடர
வழுவில் போகமொடு வரம்பின்று நுகரும்
உழுவ லன்பி னுள்ளந் தாங்கி
இழையினுங் கொடியினு மிடியினும் பிணங்கித்
தேனினும் பாலினுந் தீஞ்சுவைத் தாகிக்
குலத்தினுங் குணத்தினுங் கூடிய வன்பினும்
இனத்தினும் பிறவினு மிவ்வகை யிசைந்த
அமைப்பருங் காதலு மிமைப்பினு ளடக்கி
ஒருவயிற் போல வுள்ளழி நோக்கமொ
டிருவயி னொத்தஃ திறந்த பின்னர்த்
தாரணி வேந்தன் றலைத்தா ணிகழ்ந்தது
காரண மாகக் காத றேறி
ஓர்ப்புறு நெஞ்சந் தேர்ச்சியிற் றிருத்திப்
பேர்த்தவன் வினவிய பெருங்களிற் றிலக்கணம்
போர்த்தொழில் வேந்தன்முன் பொருந்தக் காட்டி
நீல யானை நெஞ்சுபுக் கனன்போற்
சீல விகற்பந் தெரிந்தன னுரைக்கலும்
அதுமுன் னடக்கிய மதியறி பாகரொ
டங்கை விதிர்த்தாங் கரசவை புகழப்
பைந்தொடிச் சுற்றமொடு பரிசனம் போக்கி
விழுநிதி யடுத்த கொழுமென் செல்வத்துக்
கணக்கரை வியன்கரக் கலவறை காக்கும்
திணைத்தொழி லாளரைப் புகுத்துமி னீங்கெனப்
புறங்காற் றாழ்ந்து போர்வை முற்றி
நிலந்தோய் புடுத்த நெடுநுண் ணாடையர்
தானை மடக்கா மான மாந்தர்
அண்ணாந் தியலா