யோகத் தஞ்சனம் வகுத்துக் கமழ்கொள் பூமியிற் கபிலை முன்னிறீஇ மகடூஉத் துறந்த மாசறு படிவத்துத் துகடீ ராளர்க்குத் துளக்கிய முடியன் மலர்கண் ணளைஇய மந்திர நறுநீர் பலருடன் வாழ்த்தப் பண்புளி யெய்திப் பால்பரந் தன்ன வால்வெள் விதானத்து மாலை தொடர்ந்த மங்கலப் பந்தர் விரிநூ லந்தணர் வெண்மணை சூழ்ந்த திருமணிக் கட்டிற் றிறத்துளி யெய்தி அறநிலை பெற்ற வருள்கொ ளவையத்து நிறைநூற் பொத்தக நெடுமணை யேற்றி வல்லோர் வகுத்து வாசனை வாக்கியம் பல்லோர் பகரப் பயம்பல பருகித் தரும விகற்பமொடு தானை யேற்பும் கரும விகற்பமொடு காமமுங் கெழீஇய இன்பக் கேள்வி யினிதுகொண் டெழீஇத் துன்ப நீங்குந் தொழின்முறை போக்கி முடிகெழு மன்னரொடு முற்றவை நீங்கிக் கடிபெருங் கோயிலுட் காட்சி விரும்பி உதயண குமரனை யுழைத்தரல் விரைந்தென உழைநிலை யாள ரோடின ரிசைப்ப இழையணி யிரும்பிடி யெருத்த மேறிக் கடையணி யாவணங் கைதொழப் போதந் தெறிவேற் பெருங்கடை யியைந்தன னிற்பத் தருமணன் முற்றத்துத் தானெதிர் சென்று திருமணி யம்பலங் கொண்டொருங் கேறி இரட்டைத் தவிசி னிருக்கை காட்டி இசைக்க வேண்டா விதையுன தில்லெனச் சிறப்புடைக் கிளவி செவ்விதிற் பயிற்றித் தளரிய லாயமொடு தன்புடை நின்ற பணியோள் பற்றிய பவழச்

|