பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   14
Zoom In NormalZoom Out


 

மணிக்கயிற் றூசன் மறலிய விடத்தும்
கொய்ம்மலர்க் காவும் பொய்கைக் கரையும்
அந்தக் கேணியும் வந்துபெயர் கூவித்
தவ்வை மகளிருந் தாய்கெழு பெண்டிரும்
அவ்வழி யாயமு நொய்தகப் படுப்ப
முத்தின ருத்தியர் மும்மணிக் காசினர்
கச்சினர் கண்ணியர் கதிர்வெள் வளையினர்
சில்கலத் தியன்ற வணியின ரல்லது
பல்கலஞ் சேரா மெல்லென் யாக்கையர்
அசைவில் குமரரை யாடிடத் தணங்கு
நசையுட் கொண்ட நன்மை யியன்று
விழுத்தகைத் தெய்வம் வழுத்தா மரபிற்
றார்ப்பொலி மேனிக் கூர்ப்பணங் கொடுக்கிய
மண்டு தணிதோண் மாசின் மகளிர்
பெண்டுணை சார்வாக் கண்டுழிக் கலங்கிக்
கடைக்கண் சிவப்புங் கதிர்முலை யுருப்பும்
மடக்காக் கூழையு மருங்குலும் பற்றிப்
புதையிருந் தன்ன கிளரொளி வனப்பினர்
அரங்கொல் கிண்கிணி யிரங்க வொல்கிப்
பொற்கிடுகு செறிந்து போர்வை முற்றி
முத்துக்காழ் தொடர்ந்த சித்திரக் கூடத்துப்
பவழக் கொடுங்காழ் பத்திமுகத் தழுத்தித்
திகழ்கோட் டியன்ற திமிசுகுடப் பொற்கால்
உரிமைச் சுற்றத் துரியோர்க்குத் திறந்த
திருமணி யம்பலத் திமிழ்முழாத் ததும்பும்
அரங்க நண்ணி யரிமா சுமந்த
மரகதத் தியன்ற மணிக்காற் கட்டில்
நூல்வினை நுனித்த நுண்டொழி லாளர்
வாலரக் கூட்டிய வானூ னிணவைப்
பால்பரந் தன்ன பஞ்சி மெல்லணைச்
சேக்கை மெலியச் செம்மாந் திருந்த
முடிகெழு தந்தை முன்னர்த் தோன்றி
அடிதொழு திறைஞ்சிய வவரிடை யெல்லாம்
தெய்வத் தாமரைத் திருமகட்