சொத்துற் றமைந்த சுதையில் செஞ்சுவர் வெண்கோட்டு நெடுந்தூண் விதானந் தூக்கித் தேநவின் றோங்கிய திருநா றொருசிறைக் கீத சாலை வேதி நிறைய மல்லற் சுற்றமொடு கல்லெனப் புகுதந் தரக்குப் பூமி யாயமொ டேறிப் பரப்புமல ரொருசிறைப் பாவையை நிறீஇப் பண்ணமை நல்லியாழ்ப் பலிக்கடன் வகீஇய அண்ணல் வருகென வவ்வயி னோடி ஒண்டொடி மகளிர் கொண்டகம் புகுதரத் தானைத் தவிசிற் றகையோ னேற ஏனைத் தவிசி னங்கையை யிருத்தினர் இன்னா ளென்ப திவனு மறியான் ........................ நன்னர்க் கிளவி நயவரப் பயிற்றி ஆசான் கொடுக்கு மரும்பெறல் விச்சை காண்போர் செய்யுங் கடப்பா டிதுவென வெள்வளை முன்கை தோழியர் பற்றி ஒள்ளிழை மாத ரொழுக்கஞ் செய்கெனக் காந்த ளழித்த கைம்முகிழ் கூப்பிக் கஞ்சிகை திறந்த பொழுதி னன்றுதன் காட்சிக் கொத்த கள்வ னாதலின் மேற்படு நோக்கமொ டிருவரு மெய்தி ஏப்பெறு துயரமொ டிலங்கிழை யிறைஞ்சிப் பொற்காற் படுத்துப் பூந்துகில் வளைஇக் கைக்கோற் சிலதரொடு கன்னியர் காப்பத் தெய்வத் தன்ன திறலோன் காட்டக் கைவைத் தனளாற் கனங்குழை யாழென் கைவைத் தமைந்த கனங்குழைக் கவ்வியாழ் வைக றோறும் வத்தவன் காட்ட நிகழ்வதை யுரைக்கும் புகர்ச்சொன் மாக்கள் ஒன்னலர் நுழையா வுரிமை மாணகர்த் தன்மக ளொருத்தியைத் தானயாழ் கற்கென ஏதின் மன்னனை யெண்ணான் றெளிந்த பேதை மன்னன் பின்னுங்

|