பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   19
Zoom In NormalZoom Out


 

சூழ்ச்சிய ராகிப்
பன்னாள் கழிந்த பின்னர் முன்னாள்
எண்மெய்ப் பாட்டினு ளிரக்க மெய்ந்நிறீஇ
ஒண்வினை யோவியர் கண்ணிய விருத்தியுட்
டலையத னும்பர்த் தான்குறிக் கொண்ட
பாவை நோக்கத் தாரணங் கெய்தி
முற்றான் கண்ட முகஞ்செய் காரிகை
உட்கொண் டாற்று முறுபிணி தலைஇக்
கட்கொண் டாங்குக் களிநோய் கனற்றத்
தீமுகத் திட்ட மெழுகிற் றேம்பியும்
தாய்முகத் தியாத்த கன்றிற் புலம்பியும்
உயலருந் துன்பமொ டொருவழிப் பழகிப்
பயலை கொண்டவென் பையு ளாக்கை
பண்டென் வண்ணம் பயின்றறி மாக்கள்
இன்றென் வண்ண மிடைதெரிந் தெண்ணி
நுண்ணிதி னோக்கி நோய்முத னாடிற்
பின்னிது கரக்கும் பெற்றி யரிதென
மலரே ருண்கண் மாதர்க் கமைந்த
அலரவண் புதைக்கு மருமறை நாடித்
தெரிவுறு சூழ்ச்சியு ளிருவரு மெண்ணிப்
பிறன்பாற் பட்ட பெண்பா னாடி
அவள்பாற் பட்ட வார்வஞ் செய்கம்
அன்னா ளொருத்தியை யறிந்தனை வம்மெனப்
பல்வேற் சுற்றம் பணியிற் போகி
நகர்முழு தறிய நாணிகந் தொரீஇ
ஒருவன் பாங்க ருளம்வைத் தொழுகும்
அதன்மி யாரென வாங்கவன் வினவ
இரங்குபொற் கிண்கிணி யிளையோர் நடுவண்
அரங்கியன் மகளிர்க் காடல் வகுக்கும்
தலைக்கோற் பெண்டிரு டவ்வை யொருமகள்
நாடகக் கணிகை நருமதை யென்னும்
பாவை யாகுமிப் பழிபடு துணையென
ஒருநூற் றொருகழஞ் சுரைகண் டெண்ணிய
கனபொன் மாசை காண வேந்தி
மன்றமு மறுகுங் கம்பலை கழும
வனப்புமுத லாக வழிவர வமைந்து
குணத்துமுறை வகையிற் கோல மெய்தி
வீழ்ந்தோர் நல்கும் வெறுக்கை யன்றிக்
காணி கொண்டுங் கடனறிந் தெண்ணிய
ஒன்றுமுத லாக வோரெட் டிறுத்த
ஆயிரங் காறு மாத்த