தொழுகிச் சாலி கவினிய கோலச் செறுவிற் செல்வங் கொடுத்து நல்குத லறாஅ இன்பங் கெழீஇய மன்பெருஞ் சிறப்பிற் பல்குடித் தொல்லூர் புல்லுபு சூழ உயர்மிசை யுலகி னுருகெழு பன்மீன் அகவயிற் பொலிந்துத னலங்குகதிர் பரப்பி நிலப்புடை நிவத்தரு நிறைமதி போலக் காட்சி யியைந்த மாட்சித் தாகிச் சித்திரக் கைவினை செறிந்த கோலத்துப் பத்திரப் பாம்புரி யத்தகக் கலாஅய் முற்பட வளைஇய பொற்படைப் படுகாற் கண்டவர் நடுக்குங் குண்டகழ்ப் பைந்துகில் தண்டாச் செல்வமொடு தனக்கணி யாக உடுத்துவீற் றிருந்த வடுத்தீ ரல்குல் மாற்றோர் நுகரப் படாஅ தேற்ற பன்மணி பயின்ற வொண்முகட் டுச்சி நலத்தகு ஞாயி லிலக்கண விளமுலைப் பொறிநிலை யமைந்த போர்ப்பெருங் கதவிற் செறிநிலை யமைந்த சித்திரப் புதவின் யாப்புற வமைத்த வாய்ப்புடைப் பணதி வல்லோர் வகுத்த செல்வக் கூட்டத் தாய்நலக் கம்மத் தழகொடு புணர்ந்து தீயழற் செல்வன் செலவுமிசை தவிர்க்கும் வாயின் மாடத் தாய்நல வணிமுகத் தொண்பொற் சத்தித் திண்கொடி சேர்ந்து விண்ணிற் செல்லும் விளங்கொளி யவர்களை மண்ணிற் செல்வங் காணிய வல்விரைந் தடைதர்மி னென்னு மவாவின போல வடிபட வியங்கும் வண்ணக் கதலிகைக் கூந்த லணிந்த வேந்துநுதற் சென்னிக் கடியெயின் முதுமகள் காவ லாக நெடுநீர்ப் பேரியாறு நிறைந்துவிலங் கறுத்துப் பல்வழிக் கூடிய படிய வாகிச் செல்வழி யெல்லாஞ் சிறந்த கம்பலை கரைபொரு துலாவுந் திரையொலி கடுப்ப நிறைவளங் கவினிய மறுகிரு பக்கமும் அந்தி வானத் தகடுமுறை யிருந்த ஒண்கே

|