பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   253
Zoom In NormalZoom Out


 

தொழுகிச்
சாலி கவினிய கோலச் செறுவிற்
செல்வங் கொடுத்து நல்குத லறாஅ
இன்பங் கெழீஇய மன்பெருஞ் சிறப்பிற்
பல்குடித் தொல்லூர் புல்லுபு சூழ
உயர்மிசை யுலகி னுருகெழு பன்மீன்
அகவயிற் பொலிந்துத னலங்குகதிர் பரப்பி
நிலப்புடை நிவத்தரு நிறைமதி போலக்
காட்சி யியைந்த மாட்சித் தாகிச்
சித்திரக் கைவினை செறிந்த கோலத்துப்
பத்திரப் பாம்புரி யத்தகக் கலாஅய்
முற்பட வளைஇய பொற்படைப் படுகாற்
கண்டவர் நடுக்குங் குண்டகழ்ப் பைந்துகில்
தண்டாச் செல்வமொடு தனக்கணி யாக
உடுத்துவீற் றிருந்த வடுத்தீ ரல்குல்
மாற்றோர் நுகரப் படாஅ தேற்ற
பன்மணி பயின்ற வொண்முகட் டுச்சி
நலத்தகு ஞாயி லிலக்கண விளமுலைப்
பொறிநிலை யமைந்த போர்ப்பெருங் கதவிற்
செறிநிலை யமைந்த சித்திரப் புதவின்
யாப்புற வமைத்த வாய்ப்புடைப் பணதி
வல்லோர் வகுத்த செல்வக் கூட்டத்
தாய்நலக் கம்மத் தழகொடு புணர்ந்து
தீயழற் செல்வன் செலவுமிசை தவிர்க்கும்
வாயின் மாடத் தாய்நல வணிமுகத்
தொண்பொற் சத்தித் திண்கொடி சேர்ந்து
விண்ணிற் செல்லும் விளங்கொளி யவர்களை
மண்ணிற் செல்வங் காணிய வல்விரைந்
தடைதர்மி னென்னு மவாவின போல
வடிபட வியங்கும் வண்ணக் கதலிகைக்
கூந்த லணிந்த வேந்துநுதற் சென்னிக்
கடியெயின் முதுமகள் காவ லாக
நெடுநீர்ப் பேரியாறு நிறைந்துவிலங் கறுத்துப்
பல்வழிக் கூடிய படிய வாகிச்
செல்வழி யெல்லாஞ் சிறந்த கம்பலை
கரைபொரு துலாவுந் திரையொலி கடுப்ப
நிறைவளங் கவினிய மறுகிரு பக்கமும்
அந்தி வானத் தகடுமுறை யிருந்த
ஒண்கே