ழுடுவி னொளிபெறப் பொலிந்து கண்ணுற நிவந்த பண்ணமை படுகாற் கைவினை நுனித்த மைதவழ் மாடத் தரும்படைச் செல்வ ரமர்ந்தினி துறையும் பெரும்படைச் சேரி திருந்தணி யெய்திக் கைபுனை வனப்பினோர் பொய்கை யாக வாணுதன் மகளிரு மைந்தரு மயங்கிக் காம மென்னு மேமப் பெருங்கடற் படுதிரைப் பரப்பிற் குடைவன ராடி அணிதலும் புனைதலு முனிவில ராகிக் காத லுள்ளமொடு கலந்துண் டாடுநர் போகச் சேரி புறவித ழாகச் சால்பெனக் கிடந்த கோலப் பெருநுகம் பொறைக்கழி கோத்துப் பூண்டன ராகி மறத்துறைப் பேரியாற்று மறுகரை போகி அறத்துறைப் பண்டி யசைவிலர் வாங்கி உயர்பெருங் கொற்றவ னுவப்பினுங் காயினும் தவிர்க்கவும் போக்கவும் படாத தன்மையர் நன்புலந் தழீஇய மன்பெருஞ் செய்கைக் காரணக் கிளவிப் பூரண நோக்கிற் பெருங்கடி யாள ரருங்கடிச் சேரி புறவிதழ் மருங்கிற் புல்லி்த ழாக மதியுறழ் சங்கின் வாய்வயிற் போந்த நிதியம் பெற்ற நீர்மையர் போல அதிரா வியற்கை யங்கண் ஞாலத்துக் குதிரை மருப்புங் கொளற்கரி தாகிய அழலுமிழ் நாக நிழலுமிழ் மணியும் சிங்கப் பாலுந் தெண்டிரைப் பௌவத்து மூவா வமரர் முயன்றுடன் கொண்ட வீயா வமுதமும் வேண்டிற் போய்த்தரும் அரும்பெறற் பண்ட மொருங்ககத் தடக்கி விட்டன ரிருவா முட்டில் செல்வத்துப் பல்விலை வாணிகர் நல்விலைச் சேரி புல்லிதழ் பொருந்திய நல்லித ழாக மேன்முறை யியன்ற நான்மறைப் பெருங்கடல் வண்டுறை யெல்லை கண்டுகரை போகிப் புறப்பொரு ளல்லா வறப்பொரு ணாவின் ஒளிகண் கூடிய நளிமதி போல ஓத்தொடு புணர்ந்த காப்புடை யொழுக்கின்

|