பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   254
Zoom In NormalZoom Out


 

ழுடுவி னொளிபெறப் பொலிந்து
கண்ணுற நிவந்த பண்ணமை படுகாற்
கைவினை நுனித்த மைதவழ் மாடத்
தரும்படைச் செல்வ ரமர்ந்தினி துறையும்
பெரும்படைச் சேரி திருந்தணி யெய்திக்
கைபுனை வனப்பினோர் பொய்கை யாக
வாணுதன் மகளிரு மைந்தரு மயங்கிக்
காம மென்னு மேமப் பெருங்கடற்
படுதிரைப் பரப்பிற் குடைவன ராடி
அணிதலும் புனைதலு முனிவில ராகிக்
காத லுள்ளமொடு கலந்துண் டாடுநர்
போகச் சேரி புறவித ழாகச்
சால்பெனக் கிடந்த கோலப் பெருநுகம்
பொறைக்கழி கோத்துப் பூண்டன ராகி
மறத்துறைப் பேரியாற்று மறுகரை போகி
அறத்துறைப் பண்டி யசைவிலர் வாங்கி
உயர்பெருங் கொற்றவ னுவப்பினுங் காயினும்
தவிர்க்கவும் போக்கவும் படாத தன்மையர்
நன்புலந் தழீஇய மன்பெருஞ் செய்கைக்
காரணக் கிளவிப் பூரண நோக்கிற்
பெருங்கடி யாள ரருங்கடிச் சேரி
புறவிதழ் மருங்கிற் புல்லி்த ழாக
மதியுறழ் சங்கின் வாய்வயிற் போந்த
நிதியம் பெற்ற நீர்மையர் போல
அதிரா வியற்கை யங்கண் ஞாலத்துக்
குதிரை மருப்புங் கொளற்கரி தாகிய
அழலுமிழ் நாக நிழலுமிழ் மணியும்
சிங்கப் பாலுந் தெண்டிரைப் பௌவத்து
மூவா வமரர் முயன்றுடன் கொண்ட
வீயா வமுதமும் வேண்டிற் போய்த்தரும்
அரும்பெறற் பண்ட மொருங்ககத் தடக்கி
விட்டன ரிருவா முட்டில் செல்வத்துப்
பல்விலை வாணிகர் நல்விலைச் சேரி
புல்லிதழ் பொருந்திய நல்லித ழாக
மேன்முறை யியன்ற நான்மறைப் பெருங்கடல்
வண்டுறை யெல்லை கண்டுகரை போகிப்
புறப்பொரு ளல்லா வறப்பொரு ணாவின்
ஒளிகண் கூடிய நளிமதி போல
ஓத்தொடு புணர்ந்த காப்புடை யொழுக்கின்