அத்துணை யிருந்தபி னருங்காட் டகவயின் மொய்த்தழ லீமத்து முன்னர்க் காட்டிய தவாஅ வன்பிற் றவமா சாதனை போகிய பொழுதி னாகிய நலத்தொடு மேலை யாகிய வடிவின ளாகி மற்றவ ளடைவது தெற்றெனத் தெளியெனக் கற்புடை மாதரைக் கைப்படுத் தன்னதோர் கட்டுரை வகையிற் பட்டுரை யகற்றி ஆப்புடை யொழுக்க மறியக் கூறிக் காப்பொடு புணரிற் காணலு மெளிதெனக் காவல குமரற்கு மேவன வுரைத்து விடுத்தவன் போகிய பின்றை மடுத்த இருநிலம் புகுதலு மொருவிசும் பிவர்தலும் வருதிரை நெடுங்கடல் வாய்க்கொண் டுமிழ்தலும் மந்தர மேந்தலு மென்றிவை பிறவும் பண்டியல் விச்சை பயிற்றிய மாக்களைக் கண்டு மறிதுங் கண்கூ டாகச் செத்தோர்ப் புணர்க்கும் விச்சையொடு புணர்ந்தோர்க் கேட்டு மறியலம் வீட்டருஞ் சிறப்பிற் புண்ணிய முடைமையி னண்ணின னாமிவன் ஒருதலை யாகத் தருதல் வாயென உறுதி வேண்டி யுருமண் ணுவாவும் மருவிய தோழரு மன்னனைத் தேற்றி மாய வொழுக்கமொடு சேயதை நோக்கி மிகுதிக் காதன் மகத மன்னனொடு சுற்ற மாக்குஞ் சூழ்ச்சிய ராகிக் கொற்ற வேந்தன் குறிப்புவழி யோடி அகத்துறைந் தொடுங்குதல் செல்லா ரகன்மதிற் புறத்தொடுங் கினராற் பொருள்பல புரிந்தென். பொருள்புரி யமைச்சர் பூங்கழற் குருசிலொ டிருளறு திருமணி யிராசகிரி யத்துப் புறமதி லொடுங்கிய பொழுதின் மறனுவந் தமரா மன்ன ரருஞ்சம முருக்கிப் பைங்கழ லமைந்த பாடமை நோன்றாள் வெண்கதிர் மதியின் வீறொளி திகழ்ந்து தான்மீக் கூரிய வேம வெண்குடை மணிமுடிச் சென்னி மகத

|