பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   260
Zoom In NormalZoom Out


 

மலி திருநகர் விழவுவினை தொடங்க
அரும்பொறி நுனித்த யவனக் கைவினைப்
பெரும்பொறி வையத் திருந்தியாப் புறீஇ
மங்கலச் சாந்தின் மலர்க்கொடி யெழுதிப்
பைம்பொற் பத்திரம் புளகமொடு வீக்கிக்
கதிர்நகைத் தாம மெதிர்முக நாற்றிப்
பத்திர மாலை சித்திர மாகப்
புடைப்புடை தோறுந் தொடக்கொடு தூக்கிக்
கட்டி தோய்த்த காழகி னறும்புகை
பட்டுநிணர் கட்டிற் பல்படை குளிப்ப
உள்ளக மருங்கின் விள்ளாக் காதற்
றுணைநலத் தோழியர் துப்புர வடக்கி
அணிநலத் தோழிக் கமைந்தன வியற்றி
நெய்ந்நிறங் கொண்ட பைந்நிற மஞ்சளின்
வைம்மருப் பணிபெற வண்ணங் கொளீஇக்
கைவினைக் கண்ணி கவின்பெறச் சூட்டித்
தகைமலர்ப் பொற்றார் வகைபெற வணிந்து
காண்டகு வனப்பிற் காலியற் செலவிற்
பாண்டில் வையம் பண்ணிப் பாகன்
கோலுடைக் கையிற் கூப்புவன னிறைஞ்சி
வையம் வந்து வாயி னின்றமை
தெய்வ மாதர்க் கிசைமின் சென்றென
இசைத்த மாற்றத் துரைப்பெதிர் விரும்பிப்
போதுவிரி தாமரைத் தாதகத் துறையும்
தீதுதீர் சிறப்பிற் றிருமக ளாயினும்
உருவினு முணர்வினு மொப்புமை யாற்றாத்
தெரியிழை யல்குற் றேமொழிக் குறுமகள்
பாவையும் பந்துங் கழங்கும் பசும்பொற்
றுதையு முற்றிலும் பேதை மஞ்ஞையும்
கிளியும் பூவையுந் தெளிமணி யடைப்பையும்
கவரியுந் தவிசுங் கமழ்புகை யகிலும்
சாத்துக் கோயும் பூத்தகைச் செப்பும்
இன்னவை பிறவு மியைய வேந்தி
வண்ண மகளிர் வழிநின் றேத்திச்
செண்ணச் சேவடி போற்றிச் சேயிழை
மென்மெல விடுகெனப் பன்முறை பணிய
ஒண்செங் காந்தட்