கொழுமுகை யுடற்றிப் பண்கெழு தெரிவிர லங்கை சிவப்ப மயிலெருத் தணிமுடி மாதர்த் தோழி கயிலெருத் தசைத்த கைய ளாகித் தாழியுண் மலர்ந்த தண்செங் குவளை ஊழுறு நறும்போ தொருகையிற் பிடித்து விண்ணக மருங்கின் வேமா னியர்மகள் மண்ணகத் திழிதர மனம்பிறழ்ந் தாங்குக் கன்னிக் கடிநகர்ப் பொன்னிலத் தொதுங்கி விடுகதிர் மின்னென விளங்குமணி யிமைப்ப இடுமணன் முற்றத்து மெல்லென விழிதர வாயில் போந்து வைய மேறிற் சாய னோமெனத் தாயகட் டெடுத்துப் போற்றுப்பல கூற வேற்றுவன ளிருப்பப் பாகனை யொழித்துக் கூன்மகள் கோல்கொளப் பொதியிற் சோலையுட் கதிரெனக் கவினிய கருங்கட் சூரற் செங்கோல் பிடித்த கோற்றொழி லாளர் மாற்றுமொழி விரவி நலத்தகு நங்கை போதரும் பொழுதின் விலக்கரும் வேழம் விடுதி ராயிற் காயப் படுதிர் காவலன் பணியென வாயிற் கூறி வழிவழி தோறும் வேக யானைப் பாகர்க் குணர்த்தி உட்குவ ருருவங் கட்புல மருங்கிற் காண விடாஅ ராணையி னகற்றிக் கச்சுப்பிணி யுறுத்துக் கண்டகம் பூண்ட அச்சுறு நோக்கி னறுபது கழிந்த காஞ்சுகி மாக்கள் சேர்ந்துபுடை காப்பக் கண்டோர் விழையுந் தண்டாக் காதலொ டருந்தவ முண்மை யறிமி னீரெனப் பெருஞ்சாற் றுறூஉம் பெற்றியள் போலப் பைந்தொடி மகளிர் நெஞ்சுநிறை யன்பொடு வண்ண மலருஞ் சுண்ணமுந் தூவ அநங்கத் தானத் தணிமலர்க் காவிற் புலம்படை வாயில் புக்கனள் பொலிந்தென். வாயில் புக்கபின் வைய நிறீஇ ஆய்வளைத் தோளி யகம்புக் கருளென வைய வலவன் வந்தனன் குறுகிப் பூண்ட பாண்டியம் பூட்டுமுதல் விட்டபின் மஞ்சுவிரித் தன்ன வைய வாயிற் கஞ்சிகை கதுமெனக்

|