பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   261
Zoom In NormalZoom Out


 

கொழுமுகை யுடற்றிப்
பண்கெழு தெரிவிர லங்கை சிவப்ப
மயிலெருத் தணிமுடி மாதர்த் தோழி
கயிலெருத் தசைத்த கைய ளாகித்
தாழியுண் மலர்ந்த தண்செங் குவளை
ஊழுறு நறும்போ தொருகையிற் பிடித்து
விண்ணக மருங்கின் வேமா னியர்மகள்
மண்ணகத் திழிதர மனம்பிறழ்ந் தாங்குக்
கன்னிக் கடிநகர்ப் பொன்னிலத் தொதுங்கி
விடுகதிர் மின்னென விளங்குமணி யிமைப்ப
இடுமணன் முற்றத்து மெல்லென விழிதர
வாயில் போந்து வைய மேறிற்
சாய னோமெனத் தாயகட் டெடுத்துப்
போற்றுப்பல கூற வேற்றுவன ளிருப்பப்
பாகனை யொழித்துக் கூன்மகள் கோல்கொளப்
பொதியிற் சோலையுட் கதிரெனக் கவினிய
கருங்கட் சூரற் செங்கோல் பிடித்த
கோற்றொழி லாளர் மாற்றுமொழி விரவி
நலத்தகு நங்கை போதரும் பொழுதின்
விலக்கரும் வேழம் விடுதி ராயிற்
காயப் படுதிர் காவலன் பணியென
வாயிற் கூறி வழிவழி தோறும்
வேக யானைப் பாகர்க் குணர்த்தி
உட்குவ ருருவங் கட்புல மருங்கிற்
காண விடாஅ ராணையி னகற்றிக்
கச்சுப்பிணி யுறுத்துக் கண்டகம் பூண்ட
அச்சுறு நோக்கி னறுபது கழிந்த
காஞ்சுகி மாக்கள் சேர்ந்துபுடை காப்பக்
கண்டோர் விழையுந் தண்டாக் காதலொ
டருந்தவ முண்மை யறிமி னீரெனப்
பெருஞ்சாற் றுறூஉம் பெற்றியள் போலப்
பைந்தொடி மகளிர் நெஞ்சுநிறை யன்பொடு
வண்ண மலருஞ் சுண்ணமுந் தூவ
அநங்கத் தானத் தணிமலர்க் காவிற்
புலம்படை வாயில் புக்கனள் பொலிந்தென்.
வாயில் புக்கபின் வைய நிறீஇ
ஆய்வளைத் தோளி யகம்புக் கருளென
வைய வலவன் வந்தனன் குறுகிப்
பூண்ட பாண்டியம் பூட்டுமுதல் விட்டபின்
மஞ்சுவிரித் தன்ன வைய வாயிற்
கஞ்சிகை கதுமெனக்