தகை மன்னன் செஞ்சுடர் முகத்தே செருமீக் கூரிய வெஞ்சின வேந்தர்க்கு நஞ்சுமிழ் நாகத்துத் தீயோ ரன்ன திறல வாகி முளையேர் முறுவன் முகிழ்த்த சின்னகை இளையோர் நெஞ்சிற் றளைமுதல் பரிந்தவர்க் கமிழ்தம் பொதிந்த வருளின வாகித் தலைப்பெருந் தாமரைச் செம்மல ரன்ன நலத்தொடு புணர்ந்த விலக்கண நெடுங்கண் வயப்பட லுற்று வயங்கிழை மாதர் தானுங் கதுமென நேர்முக நோக்க நெஞ்சிறை கொளீஇய நிறையமை நெடுந்தாழ் வெந்தொழிற் காம வேட்கை திறப்பத் திண்பொறி கலங்கித் திறல்வே றாகி வேலை யெல்லைமீதூர்ந் திரண்டு கோலப் பெருங்கடல் கூடி யாங்கும் இசைந்த வனப்பி னேயர் மகற்கும் பசைந்த காதற் பதுமா பதிக்கும் யாப்புறு பால்வகை நீப்புற வின்றிப் பிறப்புவழிக் கேண்மையிற் சிறப்புவழி வந்த காமப் பெருங்கடல் கண்ணுறக் கலங்கி நிறைமதி யெல்லைத் துறையிகந் தூர்தர நன்னகர் கொண்ட தன்னமர் விழவினுட் கரும்புடைச் செல்வன் விரும்புபு தோன்றித் தன்னலங் கதுமெனக் காட்டி யென்னகத் திருநிறை யளத்தல் கருதிய தொன்றுகொல் அந்தண வடிவொடு வந்திவட்டோன்றி மேவன நுகர்தற்கு மாயைபி னிழிதரும் தேவ குமரன் கொல்லிவன் றெரியேன் யாவனாயினு மாக மற்றென் காவ னெஞ்சங் கட்டழித் தனனென வெஞ்சின விடலையொடு நெஞ்சுமா றாடி உலைப்பருந் தானை யுதயண குமரற் கிலைக்கொழுந்து குயின்ற வெழில்வளைப் பணைத்தோள் உரிய வாயின வுணர்மி னென்றுதன் அரிமதர் நெடுங்க ணயனின் றோர்க்கும் அறியக் கூறுத ல

|