பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   264
Zoom In NormalZoom Out


 

மர்ந்தன போல
நெறியிற் றிரியா நிமிர்ந்துசென் றாட
வளங்கெழுமாவினிளந்தளி ரன்ன
நயத்தகு மேனியு நல்லோர் நாடிய
பயப்புள் ளுறுத்த படியிற் றாகக்
கைவரை நில்லாப் பையு ளொடுக்கி
உட்கு நாணு மொருங்குவந் தடைதர
நட்புடைத் தோழி நண்ணுவன ளிறைஞ்ச
மேதகு வையத்தின் மெல்லென விழிந்து
தாதுகு புனைமலர்த் தண்பூங் காவினுட்
சூடக முன்கைச் சுடர்க்குழை மகளிரொ
டாடுதலானா வவாவொடு நீங்கி
வனப்பெனப் படூஉந் தெய்வந் தனக்கோர்
உருவுகொண் டதுபோற் றிருவிழை சுடரத்
தன்னமர் தோழி தம்புறத் தசைஇ
அன்ன நாண வண்ணலைக் கவற்றாப்
பொன்னரிக் கிண்கிணி புடைபெயர்ந் தரற்ற
அரிச்சா லேகத் தறைபல பயின்ற
திருக்கிளர் மாடஞ் சேர்ந்துவலங் கொண்டு
கழிபெருஞ் சிறப்பிற் கன்னி மகளிர்
அழியுந் தான மவ்விடத் தருளி
நான்முகன் மகளிர் நூன்முதற் கிளந்த
ஒழுக்கிற் றிரியா ளுறுபொருள் வேண்டும்
வழுக்கா வந்தணர் வருக யாவரும்
விலக்கவு நீக்கவும் பெறீஇ ரென்றுதன்
தலைத்தாண் முதியர்க்குத் தானே கூறி
நோன்புமுத றொடங்கித் தேங்கமழ் கோதை
தலைநாட் டானந் தக்கவை யளித்தலிற்
பலநா ணோற்ற பயனுண் டெனினே
வளமையும் வனப்பும் வண்மையுந் திறலும்
இளமையும் விச்சையு மென்றிவை பிறவும்
இன்பக் கிழமையு மன்பே ருலகினுள்
யாவர்க் காயினு மடையு மடையினும்
வார்கவுள் யானை வணக்குதற் கியைந்த
வீணை விச்சையொடு விழுக்குடிப் பிறவரிது
விழுக்குடிப் பிறந்திவ் வீறொடு விளங்கிய
வழுக்கா மரபின் வத்தவர் பெருமகன்
உதயண