பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   267
Zoom In NormalZoom Out


 

மாண்ட வேள்வி மந்திர முத்தீச்
சாண்டிய னென்னுஞ் சால்புடை யொழுக்கின்
ஆய்ந்த நெஞ்சத் தந்தணன் மகனென்
மாணக னென்பேன் மற்றிந் நாடு
காண லுறலொடு காதலிற் போந்தனென்
என்றது சொல்ல நன்றென விரும்பி
ஆய்புக ழண்ணலை யறிந்தன ளாகிச்
சேயிழைக் கூன்மகள் சென்றனள் விரைந்தென்
சேயிழைக் கூன்மகள் செவ்வனங் கூறிப்
போகிய பொழுதி னாகிய சூழ்ச்சி
அரும்பெறற் றோழரைப் பொருந்தலும் பொருக்கெனப்
பகலிடம் விளக்கிய பருதியஞ் செல்வன்
அகலிடம் வறுவி தாக வத்தத்
துயர்வரை யுப்பாற் கதிர்கரந் தொளிப்ப
ஆண்கட னகற லதுநோன் றொழுகுதல்
மாண்பொடு புணர்ந்த மாசறு திருநுதற்
கற்புடை மகளிர் கடனெனக் காட்டி
வினைக்கும் பொருட்கு நினைத்துநீத் துறையுநர்
எல்லை கருதிய திதுவென மெல்லியற்
பணைத்தோண் மகளிர்க்குப் பயிர்வன போல
மனைப்பூங் காவின் மருங்கிற் கவினிய
பைந்தார் முல்லை வெண்போது நெகிழ
வெறுக்கைச் செல்வம் வீசுத லாற்றாது
மறுத்துக் கண்கவிழ்ந்த மன்னர் போல
வாச மடக்கிய வாவிப் பன்மலர்
மாசி லொள்ளொளி மணிக்கண் புதைப்பப்
பெருமை பீடற நாடித் தெருமந்
தொக்க லுறுதுய ரோப்புத லுள்ளிப்
பக்கந் தீர்ந்த பரிசில ருந்தவாச்
செறுமுகச் செல்வரிற் சேராது போகி
உறுபொரு ளுள்ள துவப்ப வீசி
வெறுவது விடாஅ விழுத்தகு நெஞ்சத்
துரத்தகை யாளர் சுரத்துமுதற் சீறூர்
எல்லுறு பொழுதிற் செல்ல லோம்பி
மகிழ்பத மயின்றிசி னாங்கு மல்லிகை
அவிழ்தா தூதி யளிதுயி