மாண்ட வேள்வி மந்திர முத்தீச் சாண்டிய னென்னுஞ் சால்புடை யொழுக்கின் ஆய்ந்த நெஞ்சத் தந்தணன் மகனென் மாணக னென்பேன் மற்றிந் நாடு காண லுறலொடு காதலிற் போந்தனென் என்றது சொல்ல நன்றென விரும்பி ஆய்புக ழண்ணலை யறிந்தன ளாகிச் சேயிழைக் கூன்மகள் சென்றனள் விரைந்தென் சேயிழைக் கூன்மகள் செவ்வனங் கூறிப் போகிய பொழுதி னாகிய சூழ்ச்சி அரும்பெறற் றோழரைப் பொருந்தலும் பொருக்கெனப் பகலிடம் விளக்கிய பருதியஞ் செல்வன் அகலிடம் வறுவி தாக வத்தத் துயர்வரை யுப்பாற் கதிர்கரந் தொளிப்ப ஆண்கட னகற லதுநோன் றொழுகுதல் மாண்பொடு புணர்ந்த மாசறு திருநுதற் கற்புடை மகளிர் கடனெனக் காட்டி வினைக்கும் பொருட்கு நினைத்துநீத் துறையுநர் எல்லை கருதிய திதுவென மெல்லியற் பணைத்தோண் மகளிர்க்குப் பயிர்வன போல மனைப்பூங் காவின் மருங்கிற் கவினிய பைந்தார் முல்லை வெண்போது நெகிழ வெறுக்கைச் செல்வம் வீசுத லாற்றாது மறுத்துக் கண்கவிழ்ந்த மன்னர் போல வாச மடக்கிய வாவிப் பன்மலர் மாசி லொள்ளொளி மணிக்கண் புதைப்பப் பெருமை பீடற நாடித் தெருமந் தொக்க லுறுதுய ரோப்புத லுள்ளிப் பக்கந் தீர்ந்த பரிசில ருந்தவாச் செறுமுகச் செல்வரிற் சேராது போகி உறுபொரு ளுள்ள துவப்ப வீசி வெறுவது விடாஅ விழுத்தகு நெஞ்சத் துரத்தகை யாளர் சுரத்துமுதற் சீறூர் எல்லுறு பொழுதிற் செல்ல லோம்பி மகிழ்பத மயின்றிசி னாங்கு மல்லிகை அவிழ்தா தூதி யளிதுயி

|