பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   268
Zoom In NormalZoom Out


 

லமரக்
கழனி யாரல் கவுளகத் தடக்கிப்
பழன மருதிற் பார்ப்புவாய் சொரிந்து
கருங்கா னாரை நரன்றுவந் திறுப்பத்
துணைபிரி மகளி ரிணைமலர் நெடுங்கண்
கட்டழன் முத்தங் காலப் பட்டுடைத்
தனிக்கா ழல்குற் பனிப்பசப் பிவர
அழல்புரை வெம்பனி யளைஇ வாடை
உழல்புகொண் டறாஅ தொல்லென் றூர்தரச்
செங்கேழ் வானக் கம்பலம் புதைஇ
வெங்க ணீர தாகி வேலிற்
புன்கண் மாலை போழத் தன்கண்
தீராக் கற்பிற் றேவியை மறந்து
பேராக் கழற்காற் பெருந்தகை புலம்பிப்
பைவிரி யல்குற் பதுமா பதிவயிற்
கைவரை நில்லாக் காம வேகம்
அன்றுமுத லாகச் சென்றுமுறை நெருங்கப்
பவழமு மணியும் பாங்குபட விரீஇத்
திகழ்கதிர்ப் பசும்பொற் சித்திரச் செய்கை
வனப்பமை வையந் தனக்குமறை யாகிய
கஞ்சிகை கடுவளி யெடுப்ப மஞ்சிடை
வானர மகளிரிற் றானணி சுடர
முகைநலக் காந்தண் முகிழ்விர னோவத்
தகைமலர்ப் பொய்கைத் தண்செங் கழுநீர்
சில்லெனப் பிடித்து மெல்லென விழிந்து
நண்ண வருவோள் போலு மென்கண்
ஆற்றே னவட னஞ்சாந் திளமுலை
நோற்றே யாயினு நுகர்வல் யானெனத்
தெய்வ நல்யாழ் கையமைத் தியற்றிய
ஐதேந் தல்கு லவந்திகை வீவும்
உறுதுணைத் தோழ னிறுதியு நினையான்
மாண்ட சூழ்ச்சி மந்திர வமைச்சர்
வேண்டுங் கொள்கைய னாகி நீண்ட
தடம்பெருங் கண்ணி தகைபா ராட்டி
உறுவகை யண்ண றறுகண் பொருந்தலும்
கைவயிற் கொண்ட கழுநீர் நறும்போது