முற்ற நோன்பு முடியு மாத்திரம் கொற்றக் கோமான் குறிப்பின் றாயினும் வினவ வேண்டா செலவென விரும்பி மெல்லென் கிளவி சில்லென மிழற்றிப் புனைமாண் வையம் பொருக்கெனத் தருகென வினைமா ணிளையரை யேவலின் விரும்பி நாப்புடை பெயரா மாத்திரம் விரைந்து காப்புடை வையம் பண்ணி யாப்புடை மாதர் வாயின் மருங்கிற் றருதலின் கோதை யாயம் பரவ வேறித் திருமலர் வீதி போதந் தெதிர்மலர்க் காவினுட் பொலிந்த வோவக் கைவினைக் கண்ணார் மாட நண்ணுவன ளிழிந்து தேனிமிர் படலைத் திருவமர் மார்பனைத் தானினி தெதிர்ந்த தானத் தருகே அன்று மவாவி நோக்கின ணன்றியல் இருவரு மியைந்து பருவரல் காட்டிப் புறத்தோர் முன்னர்க் குறிப்புமறைத் தொடுக்கிக் கருங்கண் டம்மு ளொருங்குசென் றாட வந்தும் பெயர்ந்து மன்றைக் கொண்டும் காலையும் பகலு மாலையும் யாமமும் தவலருந் துன்பமொடு கவலையிற் கையற் றைந்நாள் கழிந்த பின்றைத் தன்மேல் இன்னா வெந்நோய் தன்னமர் தோழிக் குரைக்கு மூக்கமொடு திருத்தகு மாதர் வான்றோய் மண்டபம் வந்தொருங் கேறித் தேன்றோய் கோதை சில்லென வுராஅய் இடுகிய கருங்கண் வீங்கிய கொழுங்கவுட் குறுகிய நடுவிற் சிறுகிய மென்முலை நீண்ட குறங்கி னிழன்மணிப் பல்கலம் பூண்ட வாகத்துப் பூந்துகி லல்குல் அயிரா பதியெனுஞ் செயிர்தீர் கூனியைத் தடந்தோண் மாதர் கொடுங்கழுத் தசைஇ நின்ற செவ்வியு ளொன்றா ரட்ட வாமான் றிண்டேர் வத்தவர் பெருமகன் கோமாட் கோடிய குறிப்பின னாகித் திகழ்தரு மதியிற் றிருமெய் தழீஇ வெள்ளைச்

|