பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   271
Zoom In NormalZoom Out


 

முற்ற நோன்பு முடியு மாத்திரம்
கொற்றக் கோமான் குறிப்பின் றாயினும்
வினவ வேண்டா செலவென விரும்பி
மெல்லென் கிளவி சில்லென மிழற்றிப்
புனைமாண் வையம் பொருக்கெனத் தருகென
வினைமா ணிளையரை யேவலின் விரும்பி
நாப்புடை பெயரா மாத்திரம் விரைந்து
காப்புடை வையம் பண்ணி யாப்புடை
மாதர் வாயின் மருங்கிற் றருதலின்
கோதை யாயம் பரவ வேறித்
திருமலர் வீதி போதந் தெதிர்மலர்க்
காவினுட் பொலிந்த வோவக் கைவினைக்
கண்ணார் மாட நண்ணுவன ளிழிந்து
தேனிமிர் படலைத் திருவமர் மார்பனைத்
தானினி தெதிர்ந்த தானத் தருகே
அன்று மவாவி நோக்கின ணன்றியல்
இருவரு மியைந்து பருவரல் காட்டிப்
புறத்தோர் முன்னர்க் குறிப்புமறைத் தொடுக்கிக்
கருங்கண் டம்மு ளொருங்குசென் றாட
வந்தும் பெயர்ந்து மன்றைக் கொண்டும்
காலையும் பகலு மாலையும் யாமமும்
தவலருந் துன்பமொடு கவலையிற் கையற்
றைந்நாள் கழிந்த பின்றைத் தன்மேல்
இன்னா வெந்நோய் தன்னமர் தோழிக்
குரைக்கு மூக்கமொடு திருத்தகு மாதர்
வான்றோய் மண்டபம் வந்தொருங் கேறித்
தேன்றோய் கோதை சில்லென வுராஅய்
இடுகிய கருங்கண் வீங்கிய கொழுங்கவுட்
குறுகிய நடுவிற் சிறுகிய மென்முலை
நீண்ட குறங்கி னிழன்மணிப் பல்கலம்
பூண்ட வாகத்துப் பூந்துகி லல்குல்
அயிரா பதியெனுஞ் செயிர்தீர் கூனியைத்
தடந்தோண் மாதர் கொடுங்கழுத் தசைஇ
நின்ற செவ்வியு ளொன்றா ரட்ட
வாமான் றிண்டேர் வத்தவர் பெருமகன்
கோமாட் கோடிய குறிப்பின னாகித்
திகழ்தரு மதியிற் றிருமெய் தழீஇ
வெள்ளைச்