பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   272
Zoom In NormalZoom Out


 

சாந்தின் வள்ளி யெழுதிய
வயந்தக குமரன் வரைபுரை யகலத்
தசைந்த தோள னாகி யொருகையுட்
டாரகம் புதைத்த தண்மலர் நறும்பைந்
தூழறிந் துருட்டா வொருசிறை நின்றுழிப்
பந்தவன் செங்கை பயில்வது நோக்கி
அந்தண வுருவொடு வந்தவ ணின்றோன்
யார்கொ லவனை யறிதி யோவெனப்
பாவை வினவப் பணிந்தவ ளுரைக்கும்
அடிகள் போக யானு மொருநாள்
ஒடியாப் பேரன் புள்ளத் தூர்தர
ஆண முடைத்தாக் கேட்டனெ னவனை
மாணக னென்போன் மற்றிந் நாடு
காண லுறலொடு காதலின் வந்தோன்
மறையோம் பாளன் மதித்தன னாகித்
தானுந் தோழருந் தான நசைஇ
நின்றனர் போகா ரென்றவட் குரைப்பப்
பல்வகை மரபிற் பந்துபுனைந் துருட்டுதல்
வல்லவன் மற்றவன் கைவயிற் கொண்டது
புறத்தோ ரறியாக் குறிப்பி னுணர்த்தி
நமக்கு வேண்டென நலத்தகை கூறக்
கண்ணினுங் கையினுங் கண்ணிய துணர்த்திப்
பெருந்தகை யண்ண றிருந்துமுக நோக்கி
நின்கைக் கொண்ட பூம்பந் தென்கை
ஆய்வளைத் தோளிக் கீக்க வென்ன
அங்கை யெற்றிச் செங்கணிற் காட்டிய
கூன்மகள் குறிப்புத் தான்மனத் தடக்கித்
தன்வயிற் றாழ்ந்த தைய னிலைமை
இன்னுயிர்த் தோழர்க் கிசைத்தல் வேண்டி
மந்திரச் சூழ்ச்சியுள் வெந்திறல் வீரன்
வள்ளிதழ்க் கோதை வாசவ தத்தையை
உள்வழி யுணரா துழலுமென் னெஞ்சினைப்
பல்லிதழ்க் கோதைப் பதுமா பதியெனும்
மெல்லியற் கோமகண் மெல்லென வாங்கித்
தன்பால் வைத்துத் தானுந் தன்னுடைத்
திண்பா னெஞ்சினைத் திரிதலொன் றின்றி
என்னுழை நிறீஇத் திண்ணிதிற் கலந்த
காம வேட்கைய டானெனக் கூற