பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   273
Zoom In NormalZoom Out


 

ஈங்கிது கேட்கென விசைச்ச னுரைக்கும்
மன்னிய விழுச்சீர் மகதத்து மகளிர்
நன்னிறை யுடையர் நாடுங் காலை
மன்னவ னாணையு மன்ன தொன்றெனாக்
கன்னி தானுங் கடிவரை நெஞ்சினள்
வேட்டுழி வேட்கை யோட்டா வொழுக்கினள்
அற்றன் றாயிற் கொற்றங் குன்றித்
தொடிகெழு தோளி சுடுதீப் பட்டெனப்
படிவ நெஞ்சமொடு பார்ப்பன வேடம்
கொண்டான் மற்றவன் கண்டோர் விழையும்
வத்தவர் கோமா னென்பதை யறிவோர்
உய்த்தவட் குரைப்ப வுணர்ந்தன ளாகிப்
பெறுதற் கரிய பெருமக னிந்நகர்
குறுக வந்தனன் கூறுதல் குணமென
நெஞ்சுநிறை விட்டன ளாகு மன்றெனின்
ஈன மாந்த ரொப்ப மற்றிவர்
தான மேற்ற றகாஅ தென்றுதன்
நுண்மதி நாட்டத்து நோக்கின ளாமது
திண்மதித் தன்றெனத் திரிந்தவன் மறுப்ப
ஒருப்பா டெய்தி யுற்றவ ரெல்லாம்
குறிப்பின் வாரா நோக்கெனக் குருசிற்கு
மறுத்த வாயிலொடு வலிப்பன ராக
உயிரொன் றாகி யுள்ளங் கலந்தவள்
செயிரின் றாகிய செங்கடை நோக்கம்
அணங்கெனக் காயிற் றவட்குமென் னோக்கம்
அத்தொழி னீர்த்தென வெய்த்தன னென்ன
உரைப்பத் தேறா வுயிர்த்துணைத் தோழரைத்
திருச்சேர் மார்பன் றேற்றுதல் வேண்டி
மலரினு மரும்பினுந் தளிரினும் வனைந்த
சந்தக் கண்ணிதன் சிந்தை யறியப்
பூக்குழை மாதர் நோக்கிடை நோக்கிப்
படுகாற் பொய்கைப் பக்க நிவந்த
நறுமலர்ப் பொதும்பர் நாற்றுவனம் போகி
மறைந்தன மிருந்த காலைமற் றவளென்
கண்ணி கொள்ளிற் கலக்கு முள்ளம்
திண்ணி தாகுத றெளிமி னீரென
மன்னவ னுரைத்தனன் மற்றவர்க் கெடுத்தென்.