ஈங்கிது கேட்கென விசைச்ச னுரைக்கும் மன்னிய விழுச்சீர் மகதத்து மகளிர் நன்னிறை யுடையர் நாடுங் காலை மன்னவ னாணையு மன்ன தொன்றெனாக் கன்னி தானுங் கடிவரை நெஞ்சினள் வேட்டுழி வேட்கை யோட்டா வொழுக்கினள் அற்றன் றாயிற் கொற்றங் குன்றித் தொடிகெழு தோளி சுடுதீப் பட்டெனப் படிவ நெஞ்சமொடு பார்ப்பன வேடம் கொண்டான் மற்றவன் கண்டோர் விழையும் வத்தவர் கோமா னென்பதை யறிவோர் உய்த்தவட் குரைப்ப வுணர்ந்தன ளாகிப் பெறுதற் கரிய பெருமக னிந்நகர் குறுக வந்தனன் கூறுதல் குணமென நெஞ்சுநிறை விட்டன ளாகு மன்றெனின் ஈன மாந்த ரொப்ப மற்றிவர் தான மேற்ற றகாஅ தென்றுதன் நுண்மதி நாட்டத்து நோக்கின ளாமது திண்மதித் தன்றெனத் திரிந்தவன் மறுப்ப ஒருப்பா டெய்தி யுற்றவ ரெல்லாம் குறிப்பின் வாரா நோக்கெனக் குருசிற்கு மறுத்த வாயிலொடு வலிப்பன ராக உயிரொன் றாகி யுள்ளங் கலந்தவள் செயிரின் றாகிய செங்கடை நோக்கம் அணங்கெனக் காயிற் றவட்குமென் னோக்கம் அத்தொழி னீர்த்தென வெய்த்தன னென்ன உரைப்பத் தேறா வுயிர்த்துணைத் தோழரைத் திருச்சேர் மார்பன் றேற்றுதல் வேண்டி மலரினு மரும்பினுந் தளிரினும் வனைந்த சந்தக் கண்ணிதன் சிந்தை யறியப் பூக்குழை மாதர் நோக்கிடை நோக்கிப் படுகாற் பொய்கைப் பக்க நிவந்த நறுமலர்ப் பொதும்பர் நாற்றுவனம் போகி மறைந்தன மிருந்த காலைமற் றவளென் கண்ணி கொள்ளிற் கலக்கு முள்ளம் திண்ணி தாகுத றெளிமி னீரென மன்னவ னுரைத்தனன் மற்றவர்க் கெடுத்தென்.

|