பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   275
Zoom In NormalZoom Out


 

முத்த மாலையும் வித்தக மாகிய
உளிப்பெருங் கம்மமு முகத்துமுத லுறீஇத்
திண்டூட் சதுரங் கொண்ட வெல்லையுட்
சீயமு மேறுந் திருவும் பொய்கையும்
சேயிதழ் மலருங் காம வல்லியும்
மேயினர் விழைய மேதகப் புணர்ந்த
கோலக் கோயுட் கொண்டுநிறை யமைத்த
சூடமை சாந்து மீடறிந்து புனைந்த
மதங்கமழ் நறுமலர்ச் சதங்கைத் தாமமும்
சாலக் கொள்கெனத் தன்வயிற் றிரியாக்
கோலக் கூன்மகட் கறியக் கூறிச்
செவிலித் தாயுந் தவ்வையு மாயமும்
அகலப் போகிய வமைய நோக்கி
அன்னம் போல மென்மெல வொதுங்கி
நன்முலைத் தீம்பா றம்மனை கொடுப்ப
ஒருங்குண் டாடிய கருங்கண் மதிமுகத்
தந்த ணாட்டி யாப்பியா யினியெனும்
மந்திரத் தோழியொடு மணங்கமழ் காவின்
அணித்தழை மகளி ரருங்கடிக் கமைந்த
மணிச்சுதைப் படுகான் மருங்கணி பெற்ற
அளப்பருங் குட்டத் தாழ்ந்த பொய்கைத்
தாட்கொ ளெல்லையுள் வாட்கண் சிவப்பக்
குளித்துங் குடைந்துந் திளைத்து விளையாடிக்
கூட்டமை நறும்புகை யூட்டமைத் தியற்றிக்
கண்ணெழிற் கலிங்கந் திண்ணென வசைத்துப்
பார மாகி நீரசைந் தொசிந்த
காரிருங் கூந்த னீரறப் புலர்த்தி
ஏற்ப முடித்துப் பூப்பிறி தணியாள்
முத்தப் பேரணி முழுக்கல மொழித்துச்
சிப்பப் பூணுஞ் செம்பொற் கடிப்பும்
ஏக வல்லியு மேற்பன வணிந்து
தாமரை யெதிர்போது வாங்கி மற்றுத்தன்
காமர் செவ்வியிற் காய்நலம் பெற்ற
நாம மோதிரந் தாண்முதற் செறித்துப்
புனைநறுஞ் சாந்தமுந் துணைமலர்ப் பிணையலும்
மனநிறை கலக்கிய கனல்புரை நோக்கத்துப்
பொன்வரை மா