பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   276
Zoom In NormalZoom Out


 

ர்ப னென்னோ யகலக்
கொள்ளி னன்றென வள்ளிதழ்க் கோதை
மன்னவன் வைத்த சின்மென் போதுடன்
நறுமலர் கமழ்சினை செறியச் சேர்த்தி
நெடுந்தோட் செல்ல றீரச் சிறந்தவன்
குறுந்தா ரகவயிற் கூடுபு முயங்கிக்
குவிமுலைச் சாந்த நவிர்முதற் பொறித்தே
இழுமென் காவின தியல்புஞ் செல்வமும்
கொழுமலர்த் தடங்கணிற் குலாஅய் நோக்க
நண்ணியோர் முன்னர்க் கண்ணியது மறைத்து
வண்ணமுகிழுமலருந் தளிரும்
நண்ணி யீன்ற நமக்கெனக் கரையா
அரும்பெறற் றோழியு மகன்ற செவ்வியுள்
விரும்புவன ளாகி விண்ணவர் மருள
வத்தவர் கோமான் வித்தகம் புனைந்த
இலைவினைக் கம்மத்துப் பலவினை கண்டே
தன்முத லாகலிற் சின்னகை முறுவலொடு
பொற்பூண் முலைமிசை யப்புபு தடாஅக்
கண்ணி கொண்டுதன் சென்னி சேர்த்தி
ஒருங்குகலந் தனள்போற் றிருந்தொளி திகழ்ந்து
பசப்புமீ தடர்ந்து மிகப்பொலிந் திலங்கத்
தன்னமர் தோழியும் பின்னமர்ந் தெய்தி
நீயார் நங்கை நின்னே போலுமெம்
சேயான் றங்கை செல்வப் பாவை
மாயோ டன்னை மலர்த்தகைக் காவினுள்
இன்னினிக் கெடுத்தே னன்னவள் கூறிய
துன்னருந் தோட்டத்திற் றுளங்குவன ளாகி
வேறுபட் டனளென விம்முவன ளிறைஞ்சிக்
கூறாது நாணிய குறிப்புநனி நோக்கி
நின்கட் கிடந்த நீரணி யேஎர்
என்கண் கவற்றிற் றென்றலோ டியலித்
தன்னகர் புக்க பின்னர்த் தோழரொடு
மன்ன குமரனும் வந்தவட் குறுகத்
தண்பூங் கண்ணிகொண்டதன் றாண்முதல்
ஒண்பூஞ் சாந்தி னுண்பொறி யொற்றிப்
போயினள் புரவலன் பூந்தார் மார்பிற்
காகிய பால