பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   277
Zoom In NormalZoom Out


 

ளிவளென் றறிந்தே
கூறிய கிளவிக் கொத்த தின்றென
உறுபுகழ் நண்பி னுருமண் ணுவாவவர்க்
கறியக் கூற வங்கை மலர்த்தா
வியந்த மனத்த ராகி நிகழ்ந்ததற்
கியாப்புறு கரும மாராய்ந் திருந்துழி
நீப்பருங் காத னிறைந்துட னாடல்
பண்புடைத் தென்றத் தண்டழை யணிந்த
காவி னத்த மேவின னாகித்
தேர்வனன் றிரிவுழி வார்தளிர் பொதுளிய
அருகுசிறை மருங்கி னொருமகள் வைத்த
புதுமலர்ப் பிணையலும் புனைநறுஞ் சாந்தமும்
கதிர்மணி யாழியுங் கண்டன னாகி
வலிகெழு மொய்ம்பின் வயந்தக குமரன்
ஒலிகெழு தானை யுதயணற் குய்ப்ப
அரும்பெறற் சூழ்ச்சி யவனையும் பின்னிணைப்
பெருந்திற லவரையும் பெற்றோன் போல
அன்புபுரி பாவை யாடிய பொய்கையுள்
நம்புபுரி மன்னனு நயந்தன னாடி
உடையு மடிசிலு முருமண் ணுவாவிற்குக்
கடனா வைத்தலிற் கைபுனைந் தியற்றி
அகன்மடி யவன்றா னமர்ந்து கொடுப்ப
வாங்கின னுடுத்துப் பூந்தண் சாந்தம்
எழுவுறழ் தோளு மகலமு மெழுதிப்
புனையிருங் குஞ்சித் தோட்டுக் கிடையே
துணைமலர்ப் பிணைய றோன்றச் சூடிச்
சுடர்மணி யாழி படைபயின்று பலித்த
செறிவிர லங்கையின் மறைவுகொள வைத்துக்
கழுநீர் நறும்போ துளர்த்துபு பிடித்து
மறங்கெழு வேந்தனு மம்மர் தீரப்
போந்த பொழுதி னேந்துநிலை மாடத்துப்
பக்க நின்ற பொற்பூங் கோதையும்
கண்ணுற நோக்கிச் சின்னகை முகத்தினள்
கண்ணிற் கூட்டமு மன்றி நம்முட்
கண்ணிய மாயினங் கவல லென்றுதன்
நெஞ்சி னகத்தே யஞ்சில மிழற்றிக்
குன்றாக் கோயில் சென்றவள் சேர்ந்தபின்
தனக்கவ ளுரிமை பூண்டமை தமர்களைச்
சினப்போர் மதலை