செவ்வன் றேற்றிப் பள்ளி கொண்ட நள்ளிருள் யாமத்துப் போரடு தறுகண் பொருந்தலும் பொருக்கென நீருடை வரைப்பி னெடுமொழி நிறீஇய பிரியாப் பெருக்கத்துப் பிரச்சோ தனன்மகள் அரியார் தடங்க ணதிநா கரிகி மணியிருங் கூந்தன் மாசுகண் புதைப்பப் பிணியொடு பின்னி யணிபெறத் தாழ்ந்து புல்லெனக் கிடந்த புறத்தள் பொள்ளென நனவிற் போலக் காதலன் முகத்தே கனவிற் றோன்றக் காளையும் விரும்பி மாசில் கற்பின் வாசவ தத்தாய் வன்க ணாளனேன் புன்கண் டீர வந்தனை யோவென வாய்திறந் தரற்றப் பைந்தளிர்க் கோதை பையென மிழற்றி ஏதில னன்னாட் டெற்றுறந் திறந்தனை காதலர் போலுங் கட்டுரை யொழிகெனக் குறுகா ளகறொறு மறுகுபு மயங்கி நிற்பெயர்ப் பாள னிப்பதி யுளனெனக் கற்பயில் பழுவங் கடந்தியான் வந்தனென் வெகுள னீயெனத் தவளையங் கிண்கிணிச் சேவடி சேர்ந்து செறியப் பற்றி வென்றடு குருசில் வீழ்ந்தன னிரப்ப மதுநாறு தெரியன் மகதவன் றங்கை பதுமா பதிவயிற் பசைந்தவள் வைத்த கோதையுஞ் சாந்துங் கொண்டணிந் தனையென மாதர்த் தேவி மறுத்து நீங்கத் தண்மலர்ப் படலைத் தருசகன் றங்கை பன்மலர்க் கோதைப் பதுமா பதியெனும் பேருடை மாத ருளண்மற் றென்பது நேரிழை யரிவை நின்வாய்க் கேட்டனென் இன்னவும் பிறவுங் கூறி மற்றென் நன்னர் நெஞ்ச நாடுவை நீயெனப் பின்னரு மிக்குப் பெருமக னிரப்ப மடங்கெழு மாதர் மறைந்தன ணீங்கக் கடுங்கதிர்க் கனலி கால்சீ்த் தெழுதர விடிந்தது மாதோ வியலிருள் விரைந்தென்.

|