விடிந்திரு ணீங்கலும் வடிந்த மான்றேர் உதையண குமரன் புதையிருட் கண்ட கனவின் விழுப்ப மனமொன் றாகிய தோழர்க் குரைப்ப வாழ்கென வாழ்த்தி முற்றிழை யரிவை செற்றங் கொண்டனள் மற்றிவள் வைத்த மாலையுஞ் சாந்தமும் அணிந்ததை பொல்லா தருளினை யினியிவட் கனிந்த காமங் கைவிடல் பொருளென உயிர்த்துணைத் தோழ ருரைப்பவும் விடாஅன் செயிர்த்தொழி லியானைச் செம்ம றெளியான் ஏற்ற பொழுதே யின்பத் தேவியொடு வேற்றோன் போல விழைவினை யகற்றித் தற்கா முற்ற தன்னமர் காதற் பொற்பூண் மாதரைப் பொருந்த வலிப்ப வாமான் றானை வத்தவ னிவனெனக் கோமாற் குணர்த்திக் கூட்டிய வந்தேம் ஒருவயி னோக்கி யிருவரு மியைதலின் ஏயர் பெருங்குடிக் காகுபெய ருண்டென ஊழ்வினை வலிப்போ டுவந்தன ராகிச் சூழ்வினை யாளர்க்குத் தோன்றல் சொல்லும் ஆருயி ரன்னவென் னற்புவார் கொளீஇக் காரிகை மத்தினென் கடுவலி கடையும் வார்வளைத் தோளி வந்தனள் புகுதரு மாடம் புக்கிருந் தோடுகய லன்ன பெருங்கண் கோட்டி விரும்புவன ணோக்கி நாணொடு நிற்கு நனிநா கரிகம் காணலெ னாயிற் கலங்குமென் னுயிரென உரப்போர் வென்றி யுதயண குமரன் இரப்போன் போல வினியோர்க் குறைகொளக் குன்றுபல வோங்கிய குளிர்நீர் வரைப்பில் நன்றுணர் மாந்தர் நாளைக் காலை இரவல ருருவொடு புரவலற் போக்கி மாற்றோ ருட்கும் வேற்றுநாட் டகவயிற் றாமு முன்ன ராகி மற்றவற் கேம நன்னெறி யீத லாற்றார் காமங் கன்றிய காவல்

|