பெருங்கதை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   279
Zoom In NormalZoom Out


 

விடிந்திரு ணீங்கலும் வடிந்த மான்றேர்
உதையண குமரன் புதையிருட் கண்ட
கனவின் விழுப்ப மனமொன் றாகிய
தோழர்க் குரைப்ப வாழ்கென வாழ்த்தி
முற்றிழை யரிவை செற்றங் கொண்டனள்
மற்றிவள் வைத்த மாலையுஞ் சாந்தமும்
அணிந்ததை பொல்லா தருளினை யினியிவட்
கனிந்த காமங் கைவிடல் பொருளென
உயிர்த்துணைத் தோழ ருரைப்பவும் விடாஅன்
செயிர்த்தொழி லியானைச் செம்ம றெளியான்
ஏற்ற பொழுதே யின்பத் தேவியொடு
வேற்றோன் போல விழைவினை யகற்றித்
தற்கா முற்ற தன்னமர் காதற்
பொற்பூண் மாதரைப் பொருந்த வலிப்ப
வாமான் றானை வத்தவ னிவனெனக்
கோமாற் குணர்த்திக் கூட்டிய வந்தேம்
ஒருவயி னோக்கி யிருவரு மியைதலின்
ஏயர் பெருங்குடிக் காகுபெய ருண்டென
ஊழ்வினை வலிப்போ டுவந்தன ராகிச்
சூழ்வினை யாளர்க்குத் தோன்றல் சொல்லும்
ஆருயி ரன்னவென் னற்புவார் கொளீஇக்
காரிகை மத்தினென் கடுவலி கடையும்
வார்வளைத் தோளி வந்தனள் புகுதரு
மாடம் புக்கிருந் தோடுகய லன்ன
பெருங்கண் கோட்டி விரும்புவன ணோக்கி
நாணொடு நிற்கு நனிநா கரிகம்
காணலெ னாயிற் கலங்குமென் னுயிரென
உரப்போர் வென்றி யுதயண குமரன்
இரப்போன் போல வினியோர்க் குறைகொளக்
குன்றுபல வோங்கிய குளிர்நீர் வரைப்பில்
நன்றுணர் மாந்தர் நாளைக் காலை
இரவல ருருவொடு புரவலற் போக்கி
மாற்றோ ருட்கும் வேற்றுநாட் டகவயிற்
றாமு முன்ன ராகி மற்றவற்
கேம நன்னெறி யீத லாற்றார்
காமங் கன்றிய காவல்